பள்ளி, கல்லூரிகளுக்கு டிச.22ம் தேதி விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

0
பள்ளி, கல்லூரிகளுக்கு டிச.22ம் தேதி விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
பள்ளி, கல்லூரிகளுக்கு டிச.22ம் தேதி விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
பள்ளி, கல்லூரிகளுக்கு டிச.22ம் தேதி விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்து திருவிழாக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் பேரகணி ஹெத்தையம்மன் திருவிழா நடைபெற உள்ளது. இவ்விழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக மாவட்ட நிர்வாகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஹெத்தையம்மன் திருவிழா:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்தது. அதில் தமிழகத்தில் அனைத்து விதமான கோவில்கள், திருவிழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. அதனை தொடர்ந்து அனைத்து விதமான கோவில்கள் திறக்கப்பட்டன. மேலும் திருவிழாக்கள் நடத்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் பேரகணி ஹெத்தையம்மன் திருவிழா வருகிற 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.

TNPSC தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் படுகர் இன மக்கள் ஹெத்தையம்மன் திருவிழாவை கொண்டாடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். அதே போல நடப்பாண்டில் வருகிற 22 ஆம் தேதி இவ்விழா நடைபெற உள்ளது. மேலும் ஹெத்தையம்மன் கோவில்கள் பேரகணி, பெத்தளா, ஒன்னதலை, கூக்கல், பெப்பேன், நுந்தளா மற்றும் சின்னகுன்னூர் போன்ற பல்வேறு கிராமங்களில் உள்ளது. ஆனால் பேரகணியில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

தமிழக அரசு ஆசிரியர்கள் கவனத்திற்கு – இடமாறுதல் கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு விரைவில்!

இவ்விழாவில் கலந்து கொள்ள மாவட்டத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றன. அத்துடன் இவ்விழாவை பொதுமக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் விதமாக வருகிற 22 ஆம் தேதி அன்று அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் ச.பா அம்ரித் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து மாவட்டத்தில் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு செயல்படும் எனவும் தெரிவித்தார். இதற்கு மாற்று வேலை நாளாக ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!