இலவச சமையல் எரிவாயு உஜ்வாலா 2.0 திட்டம் – பிரதமர் மோடி இன்று துவக்கி வைப்பு!
உஜ்வாலா 1.0 திட்டத்தை தொடர்ந்து உத்தரப் பிரதேசம் மஹோபாவில் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கி, உஜ்வாலா 2.0 திட்டத்தை இன்று பிற்பகல் 12.30 மணியளவில் தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்ற உள்ளார்.
உஜ்வாலா 2.0:
உஜ்வாலா திட்டமானது ஏழை, எளிய மக்களுக்கு சமையல் எரிவாயு வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். இதன் முதற்கட்டமாக உஜ்வாலா 1.0 திட்டம் 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த 5 கோடி பெண் உறுப்பினர்களுக்கு சமையல் எரிவாயு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டது. அதனால் பல்வேறு ஏழை, எளிய மக்கள் பயன்படுவதால் மேலும் சில பிரிவுகளும் இதில் இணைக்கப்பட்டன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,204 பேருக்கு கொரோனா – 373 பேர் உயிரிழப்பு!
2018ம் ஆண்டு பட்டியலின / பட்டியல் பழங்குடி, பிரதமரின் ஆவாஸ் யோஜனா, அந்தியோதயா அன்ன யோஜனா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், தேயிலை தோட்டம், வனப் பகுதிகளில் வசிப்பவர்கள் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்களும் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டதால், இந்த திட்டத்தின் இலக்கு 8 கோடி சமையல் எரிவாயுவாக மாற்றி அமைக்கப்பட்டது. திட்டமிடப்பட்ட நாட்களுக்கு முன்னதாகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
உஜ்வாலா 1.0 திட்டத்தினை தொடர்ந்து 2021-22 நிதிநிலை அறிக்கையில், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. உஜ்வாலா 2.0 திட்டமானது இன்று துவங்கும் நிலையில் குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு வைப்புத்தொகை இல்லாமல் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 12:30 மணிக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என கூறப்பட்டுள்ளது.