தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் – பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்தல்!
தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கு விரைவில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இலவச பஸ் பாஸ்:
தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் கல்வி நிலை கருத்தில் கொள்ளப்பட்டு கடந்த செப்டம்பர் 1 முதல் 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக 1 – 8 வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் நவம்பர் 1 முதல் திறக்கப்பட்டு உள்ளது. நடப்பு கல்வியாண்டில் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது.
TCS நிறுவன ஊழியர்களுக்கு முடிவுக்கு வரும் WORK FROM HOME – புதிய திட்டம்!
மேலும் அரசு ஏழை எளிய மாணவர்களை கருத்தில் கொண்டு புதிய பல நல திட்டங்களையும் சலுகைக்காயும் மாணவர்களுக்கு அளித்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, பாடப்புத்தகம், நோட்டுகள், எழுதுபொருட்கள், மடிகணினி போன்றகள் வழங்கப்பட்டு வருகிறது. இவைகளை தொடர்ந்து மாணவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய பஸ் பாஸ் வழங்கபடுகிறது. இதனால் வெகு தூரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
Wipro நிறுவனத்தில் 17,000 பேருக்கு வேலைவாய்ப்பு – TCS, Infosys & HCL Tech திட்டங்கள்!
இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டு தொடங்கி அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கவில்லை. அதனால் மாணவர்கள் காகிதத்தில், மாணவ, மாணவியரின் விபரம் மற்றும் போட்டோ ஒட்டி, தலைமையாசிரியர் கையொப்பம் பெற்று தற்காலிகமாக, அடையாள அட்டையை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும், போக்குவரத்து கழக அதிகாரிகளும், பஸ் பாஸ் தொடர்பாக கலந்து ஆலோசித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்கள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர். புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கும் பஸ் பாஸ் வழங்க உரிய பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.