Wipro நிறுவனத்தில் 17,000 பேருக்கு வேலைவாய்ப்பு – TCS, Infosys & HCL Tech திட்டங்கள்!
இந்தியாவின் முன்னணி IT நிறுவனமான விப்ரோ இந்திய கல்லூரிகளில் இருந்து மேலும் 17,000 புதியவர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
வேலை வாய்ப்புகள்
அடுத்த ஆண்டிற்குள் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை அளிக்க திட்டமிட்டுள்ள இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள் அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் விப்ரோ IT நிறுவனம் இந்திய கல்லூரிகளில் இருந்து மேலும் 17,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க திட்டமிட்டுள்ளது. அதே போல TCS நிறுவனமும் அடுத்த 12 மாதங்களில் 77,000 புதியவர்களை பணியமர்த்த இருக்கிறது.
அரசு பள்ளிகளின் 3.5 லட்ச ஆசிரியர்களுக்கு 15% ஊதிய உயர்வு – அறிவிப்பு வெளியீடு!
குறிப்பாக விப்ரோ நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 17,000 புதியவர்களை பணியமர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்புக்கான முந்தைய இலக்கு 12,000 ஆக இருந்தது. ஆனால் IT பொறியாளர்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் ஜூன் முதல் செப்டம்பர் மாத காலாண்டில் இந்நிறுவனம் 8,100 புதியவர்களை பணியமர்த்தியுள்ளது.
அதே போல அடுத்த நிதியாண்டிலும் சுமார் 25,000 பேருக்கு வாய்ப்பளிக்கவும் இந்நிறுவனம் முயற்சித்து வருகிறது. இருந்தாலும் இந்நிறுவனத்தில் அட்ரிஷன் விகிதம் தொடர்ச்சியாக அதிகரிப்பை கண்டு வருகிறது. குறிப்பாக கடந்த காலாண்டில் 15.5% ஆக இருந்த தேய்மான விகிதம் அதன் இரண்டாவது காலாண்டில் 20.5% ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் வரும் 2022-23 நிதியாண்டில் அதன் வளாகத்தில் 30,000 புதியவர்களை பணியமர்த்த விப்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக உலகளாவிய மனிதவளத் தலைவர் சௌரப் கோவில் தெரிவித்துள்ளார்.
இப்போது விப்ரோ நிறுவனத்தின் போட்டி நிறுவனமான TCS மற்றும் இன்போசிஸ் ஆகியவை இந்த நிதியாண்டில் முறையே 77,000 மற்றும் 45,000 கல்லூரி பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளன. இன்போசிஸ் நிறுவனம் இதற்கு முன்பு சுமார் 35,000 புதியவர்களை பணியமர்த்த திட்டமிட்டிருந்தது. இப்போது இந்த எண்ணிக்கை 10,000 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், TCS நிறுவனமும் ஆரம்பத்தில் 40,000 புதியவர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டிருந்தது.
தமிழகத்தில் செவ்வாய் கிழமை (நவ.16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது 77,000 ஆக அதிகரித்துள்ளது. தவிர செப்டம்பர் மாத காலாண்டில் காக்னிசன்ட் தொழில்நுட்ப துறை (IT) மோசமான தேய்வு விகிதமான 33% ஐ பதிவு செய்துள்ளது. இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், TCS நிறுவனம் 11.9% ஆகவும், HCL டெக்னாலஜிஸ் 15.7% ஆகவும், இன்போசிஸ் நிறுவனம் 20.1% ஆகவும், விப்ரோ 20.5% ஆகவும் குறைந்த தேய்வு விகிதத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.