அரசு பள்ளிகளின் 3.5 லட்ச ஆசிரியர்களுக்கு 15% ஊதிய உயர்வு – அறிவிப்பு வெளியீடு!

0
அரசு பள்ளிகளின் 3.5 லட்ச ஆசிரியர்களுக்கு 15% ஊதிய உயர்வு - அறிவிப்பு வெளியீடு!
அரசு பள்ளிகளின் 3.5 லட்ச ஆசிரியர்களுக்கு 15% ஊதிய உயர்வு - அறிவிப்பு வெளியீடு!
அரசு பள்ளிகளின் 3.5 லட்ச ஆசிரியர்களுக்கு 15% ஊதிய உயர்வு – அறிவிப்பு வெளியீடு!

பீகார் மாநில கல்வித்துறையில் பணியாற்றி வரும் சுமார் 3.5 லட்சம் தொடக்க, இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு 15% சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து அதனை தெளிவுபடுத்தும் வகையில் புதிய ஊதியக்குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு

நாடு முழுவதும் கொரோனா 2ம் அலைத்தொற்று ஓய்ந்திருக்க கூடிய சூழலில் கடந்த மாதம் முதல் பீகாரில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதியன்று அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நூலகர்களின் ஊதியத்தை ஏப்ரல் 1 முதல் 15 சதவீதம் உயர்த்துவதற்கான தீர்மானத்தை அம்மாநில அரசு வெளியிட்டது. இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த, தற்போது விரிவான வழிகாட்டுதல்களையும் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

ரயில் பயணிகள் கவனத்திற்கு – பழைய கட்டண நடைமுறை விரைவில் அமல்!

அந்த வகையில் நவம்பர் 12ம் தேதியன்று வெளியிடப்பட்ட ஊதியக் குழுவின் அறிக்கையில், ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஆசிரியர்கள், நூலகர்களின் உயர்த்தப்பட்ட சம்பளம் ஜனவரி 1, 2022 முதல் வழங்கப்படும். இந்த ஊதிய குழுவின் நிர்ணயத்தில், ஆசிரியர், நூலகர் ஆகியோரின் அடிப்படை ஊதியம் அவரது இளநிலை ஆசிரியரை விட குறைவாக நிர்ணயிக்கப்பட்டால், அவரது அடிப்படை ஊதியம் இளைய ஆசிரியரின் அடிப்படை ஊதியத்தின்படி நிர்ணயிக்கப்படும்.

இதனுடன் அரசின் கூடுதல் கொடுப்பனவு சலுகைகள் அப்படியே இருக்கும். அதே நேரத்தில் அடிப்படை ஊதியம் 1.15 மடங்கு வரை அதிகரிக்கும். இந்த ஊதிய உயர்வுக்குப் பிறகு, ஆசிரியர்களின் மாதச் சம்பளம் அதிகபட்சமாக ரூ.39,200 எட்டியுள்ளது. இந்த உயர்வின் பலனைப் பெற்ற பிறகு, தொடக்கநிலை முதல் மேல்நிலைப்பள்ளி வரையில் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் ஊதியம் சுமார் 3000 ரூபாயில் இருந்து 4000 ரூபாயாக உயரும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செவ்வாய் கிழமை (நவ.16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இது தொடர்பான உத்தரவில், 1 முதல் 18 வயது வரை பணிபுரியும் பயிற்சி பெறாத, தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதிய அட்டவணையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 3.5 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் நூலகர்களுக்கான புதிய ஊதியத்தை மென்பொருள் மூலம் கல்வித்துறை நிர்ணயிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியை வெளிப்படைத்தன்மையுடனும், வேகத்துடனும் மேற்கொள்ளும் வகையில், புதிய ஆன்லைன் கால்குலேட்டர் தயாராகி வருவதாகவும் அதற்கு பின்னரே சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்றும் அம்மாநில அரசு தகவல்கள் அளித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!