ரயில் பயணிகள் கவனத்திற்கு – பழைய கட்டண நடைமுறை விரைவில் அமல்!
அனைத்து இரயில்களிலும் கொரோனா காலகட்டத்திற்கு முன்னால் இருந்த பழைய இரயில்வே கட்டண முறை கூடிய விரைவில் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று இரயில்வே மூத்த அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.
இரயில்வே பயண கட்டணம்:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அந்த பொதுமுடக்கத்தின் போது பேருந்து, இரயில் என அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. ஆனால் பொதுமுடக்கத்தின் போது புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பும் வகையில் நீண்ட தூர இரயில்கள் மட்டும் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தன. இந்த கொரோனா காலகட்ட சிறப்பு இரயில்களில் பயண கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்பட்டது.
தமிழகத்தில் செவ்வாய் கிழமை (நவ.16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதாவது கொரோனா காலகட்டத்திற்கு முன்னர் இருந்த இரயில் கட்டணத்தை விட இந்த சிறப்பு இரயில்களுக்கு கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து அனைத்து இரயிகளும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அப்படி இயக்கப்பட்ட அனைத்து இரயில்களிலும் சிறப்பு இரயில் பயண கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பயணிகள் சாதாரண கட்டணத்தை அமல்படுத்துமாறு தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.
தமிழகத்தில் மாணவர்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தற்போது இந்த இரயில்கள் அனைத்தும் கொரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டண வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எந்த தேதியில் இருந்து பழைய கட்டண நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்பது குறித்து அந்த உத்தரவில் குறிப்பிடப்படவில்லை. இது குறித்து இரயில்வே மூத்த அதிகாரி தற்போது இயங்கும் 1700 இரயில்களிலும் பழைய கட்டண முறை ஓரிரு நாட்களில் அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.