தமிழகத்தில் மாணவர்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை பெற நவம்பர் 15 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
உதவித்தொகை:
இந்தியாவில் பள்ளிக்கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் இடைநிற்றல் இன்றி மாணவர்கள் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கிலும் கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மை மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊக்கத்தொகை போன்று வழங்கி அவர்கள் கல்வியில் சிறக்க வழிவகை செய்து வருகிறது. அதனை தொடர்ந்து அனைவரும் சம வாய்ப்பு அளிக்கும் நோக்கில் அரசு மாற்றுத்திறனாளர்களுக்கும் கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க, திருத்த சிறப்பு முகாம்கள் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
அரசு மாற்று திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும் மத்திய & மாநில கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளுடன் இலவச கல்வி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் 9ம் வகுப்பு முதல் முதுநிலை கல்வி பயிலும் மாற்றுதிறனாளி கல்வி உதவித்தொகைகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொருட்கள், ரூ.2000 – முன்னாள் முதல்வர் கோரிக்கை!
மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை பெற நேஷனல் காலர்ஷிப் என்ற திட்டத்தில் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விண்ணப்பித்தவர்களில் தகுதி உடைய மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலம் உதவித்தொகை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் கல்வி உதவித்தொகை பெறவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி நிறுவனம் கணக்கு வைத்துள்ள வங்கியில் ஒவஇ படிவத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.