தமிழகத்தில் செவ்வாய் கிழமை (நவ.16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி ஊத்துக்குளி, செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மின்தடை:
கொரோனா காலத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மின்தடை செய்யப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து புகார்கள் குவிந்து வருவதால் தமிழகம் முழுவதும் மின்சாரத்துறைக்கு வரும் புகார்களை உடனடியாக தீர்த்து வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மாணவர்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
கடந்த ஆட்சி காலத்தில் மின்சார துறையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாத காரணத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நவம்பர் 16ம் தேதி ஊத்துக்குளி, செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே மின் பணியாளர்கள் நலன் கருதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் கொ.தி. சந்திரசேகரன் கூறியுள்ளார்.
ஊத்துக்குளி துணை மின் நிலையம்:
ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ்., வி.ஜி.புதூா், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பட்டிணம், பி.வி.ஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம்
செங்கப்பள்ளி துணை மின் நிலையம்:
செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, அந்தியூா் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை