தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!

0
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் கவனத்திற்கு - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் கவனத்திற்கு - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!

தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வில் 6,49,000 மாணவர்கள் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு ஜூலை மாதம் துணைத் தேர்வு நடத்த அரசுத் தேர்வுகள் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

துணைத்தேர்வு:

தமிழகத்தில் 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே மாதம் 2ம் தேதி பொதுத் தேர்வுகள் தொடங்கி மே 13ம் தேதியுடன் முடிவடைந்தது. மேலும் 10ம் வகுப்பிற்கு மே 6ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது. 11ம் வகுப்பிற்கு மே 9 ம் தேதியும், 12ம் வகுப்பிற்கு மே 5ம் தேதியும் பொதுத்தேர்வுகள் நடைபெறத் தொடங்கியது. இந்த தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டதை அடுத்து தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். நடந்து முடிந்த இந்த பொதுத்தேர்வில் 10,11,12 ஆகிய வகுப்புகளில் சுமார் 6,49,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.

Exams Daily Mobile App Download

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 8 ,44,808 பேர் பதிவு செய்திருந்தனர். இதில் மொழித்தேர்வில் 43,562 பேர் பங்கேற்கவில்லை. 11ம் தேதி நடைபெற்ற தேர்வில் 14,000 பேர் பங்கேற்கவில்லை அடுத்ததாக 11ம் வகுப்பில் 8,92,740 பேர் பதிவு செய்தனர். இதில் மொழிப்பாடத் தேர்வின் போது 43,000 பேர் பங்கேற்கவில்லை. 27ம் தேதி நடந்த தேர்வில் 18,476 பேர் தேர்வு எழுதவில்லை. அதே போல 10ம் வகுப்பில் 9,74,321 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அவர்களில் 45,020 பேர் தேர்வு எழுத வரவில்லை. சரியாக 4.6 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை. 10,11,12ம் வகுப்புகளில் தேர்வு எழுத பதிவு செய்திருந்தோர் எண்ணிக்கை 27,30,000 ஆயிரம் பேர். இதில் 6,49,467 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

ரூ. 80,000/- ஊதியத்தில் IRCON நிறுவனத்தில் வேலை – Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

இது குறித்து விசாரித்த போது கொரோனா தொற்று அச்சம், வேறு சில தவிர்க்க முடியாத காரணங்கள் கூறப்பட்டது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதாத 6,49,000 மாணவர்களை துணைத் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித்துறை அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜூலை மாதம் துணைத் தேர்வு நடத்த அரசுத் தேர்வுகள் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!