சிவகங்கையில் நாளை (ஜூன் 4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மாதந்தோறும் மின்தடை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை (ஜூன் 4) சிவகங்கையில் காளையார்கோவில் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை இந்த துணை மின்நிலையத்தால் மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் மின் கசிவு மற்றும் மின் கோளாறு பிரச்சனையால் ஏற்படும் விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதனால் மாதந்தோறும் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் நாளை சிவகங்கையில் கல்லல், காளையார்கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்த துணை மின்நிலையங்களில் நாளை (ஜூன் 4) காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான காளையார்கோவில், சொர்ணவள்ளி நகர், பள்ளித்தம்மம், புலியடிதம்மம், சருகனி, மேப்பல், கொல்லங்குடி, கல்லத்தி, கருங்காளி, கருமந்தகுடி, பெரியகண்ணனூர், ஒய்யவந்தான், நாட்டரசன்கோட்டை, பொன்னலிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும் என்று உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதே போல் சிவகங்கையில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள், உயரழுத்த மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான சிவகங்கை பெருமாள் கோவில், கொட்டகுடி தெரு, மேல ரத வீதி, காந்தி வீதி, மரக்கடை வீதி, தெற்கு ராஜ ரத வீதி, சாஸ்திரி தெரு, ராம்நகர், மேலூர் சாலை, கோகலே ஹால் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (ஜூன் 4) காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.