ரேஷன் கடைகளில் உள்ள காலிபணியிடம் நிரப்பல் – தீர்மானம் நிறைவேற்றம்!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்களின் குறைதீர் கூட்டம் தற்போது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள காலிபணியிடம் நிரப்பப்படுவது தொடர்பான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
ரேஷன் கடை:
தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மலிவு விலை பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். மேலும், ரேஷன் கடையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அவ்வப்போது தமிழக அரசின் சார்பில் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், ரேஷன் கடை ஊழியர்களின் குறைகள் அவ்வப்போது கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விருதுநகரில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலையில் ரேஷன் கடை ஊழியர்களின் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
இந்த கூட்டத்தில், சிஐடியு மாவட்ட உதவி தலைவர் எம். அசோகன், மாவட்ட பொருளாளர் ஆர். ஓட்டக்காரன், மாவட்ட நிர்வாகி ஜி. பாலகிருஷ்ணன் என பலரும் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து குறைதீர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது, ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கினாலும் கூட அரியர்ஸ் தொகை வழங்கப்படவில்லை என குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் ஊழியர்களுக்கு இடம் மாறுதல் செய்ய வேண்டும் எனவும், தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ் – சேவைகள் ரத்து! பொதுமக்கள் கவனத்திற்கு
இதனையடுத்து, ரேஷன் கடைகளுக்கு வரும் பொருட்கள் எடை குறைவின்றி சரியான அளவில் தரமான பொருட்களை வழங்க வேண்டும் எனவும், ரேஷன் பொருட்கள் அனைத்தும் பாக்கெட் முறையில் வழங்க வேண்டும் எனவும், அம்மா மருந்தகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், ரேஷன் கடைகளில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்பப்பட வேண்டும் என்பது குறித்தான அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Any government jobs