மத்திய அரசின் விதவை பெண்களுக்கான பென்சன் திட்டம் – முழு விபரங்கள் இதோ!
மத்திய அரசு விதவைகளின் நலன் கருதி இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் கிராமப்புறங்களில் வசிக்கும் விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைவதற்கான விவரங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
பென்சன் திட்டம்
மத்திய அரசு பொது மக்களின் நலனுக்காக பல்வேறு வகையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக தேசிய உதவித் திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய திட்டத்தை கடந்த 1995ம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த திட்டத்தை மத்திய பிரதேச மாநிலத்தில் விதவைகளுக்காக செயல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் விதவைகளுக்கு அவர்கள் இருக்கும் வரை மாதந்தோறும் ரூ.300 வழங்கப்படுகிறது.
DFCCIL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விரைவில் விண்ணப்பிக்கவும்..!
மேலும் கிராமப்புறங்களில் வசிக்கும் விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவேதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு கணவர் இறந்த நாளிலிருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.300 வழங்கப்படும். இதில் 80 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பின் ஒவ்வொரு மாதமும் ரூ.500 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தற்போது இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம். இத்திட்டத்தில் இணைய விரும்புவர்கள் மத்திய பிரதேசத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
அத்துடன் பயனாளிகள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவராக இருக்க வேண்டும். அத்துடன் பயனாளிகள் 40 முதல் 79 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் இணைய விரும்புவர்கள் வயது சான்று, ஆதார் அட்டை, வறுமைக் கோட்டிற்கு கீழே ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி இவர்களின் விவரங்கள் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதிய தொகை வழங்கப்படும். இந்த ஓய்வூதிய தொகை கணவரை இழந்தவருக்கு பேருதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.