கோபி தான் என்னுடைய அப்பா என்கிற அனைத்து உண்மைகளையும் போட்டுடைக்கும் எழில் – அதிர்ச்சியில் ராதிகா!
தன்னை கண்டிக்க யாரும் இல்லை என கோபி இஷ்டத்திற்கு சுற்றிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் எழில் ராதிகாவை சந்தித்து எனது அப்பா தான் நீங்கள் திருமணம் செய்துகொள்ள நினைக்கிறீர்கள் என அனைத்து உண்மைகளையும் ராதிகாவிடம் கூறும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வாரா அல்லது திருமணத்திற்கு முன்னரே கோபி தான் பாக்கியாவின் கணவர் என்பது ராதிகா அறிந்துகொண்டு கோபியை விட்டு விலகி செல்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். எனது குடும்பத்திற்கு என் மீது பாசம் கிடையாது, காசுக்காக மட்டுமே என்னை இதுவரை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என கூறி தான் ராதிகாவின் பாசத்தை கோபி பெற்றார். இதற்கு பிறகு தான் ராதிகாவும் கோபியை திருமணம் செய்துகொள்ள தயாரானார்.
ஆனால் உண்மையில் கோபியை பாக்கியாவை தவிர வேறு யாராலும் இப்படி விழுந்து விழுந்து கவனிக்கவே முடியாது. இப்படி ஒரு மனைவியை வைத்துக் கொண்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென கோபி துடித்துக் கொண்டிருக்கிறார். இந்த விஷயம் எப்போது தான் பாக்கியாவிற்கு தெரியவரும் என தான் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இருக்கின்றனர். ராதிகாவைத் தான் கோபி திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்கிற விஷயம் ஏற்கனவே கோபியின் அப்பாவான ராமமூர்த்திக்கு தெரியும்.
ஆனால் உண்மையை கூறினால் பாக்கியாவை விவாகரத்து செய்து விடுவேன் என்று மிரட்டியதால் அப்படியே விட்டு விடுகிறார் எப்படியாவது இருவரின் திருமணத்தை நிறுத்திய தீரவேண்டும் என எழிலிடம் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் தாத்தா கூறுகிறார். பாக்கியாவின் வாழ்க்கை நினைத்துக் கொண்டு எழில் உடனே ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் தான் என்னுடைய அப்பா என்று ராதிகாவிடம் எழில் கூறும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. இதற்கு பிறகு கோபியை விட்டு ராதிகா விலகுவாரா அல்லது கோபியை தான் திருமணம் செய்து கொள்வேன் என அடம்பிடிக்க போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.