தடைகளை தாண்டி தன் உரிமையை கைப்பற்றிய சரஸ்வதி – ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் அடுத்தகட்ட விறுவிறுப்பு!
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சரஸ்வதி தனது உரிமை எதுவும் கிடைக்காமல் வீட்டில் ஒரு வேற்று நபராகவே நடத்தப்பட்டார். ஆனால் தற்போது அனைத்து தடைகளையும் தாண்டி தனக்கான உரிமையை கோதையின் மூலமாக சரஸ்வதி பெற்றுள்ளார்.
தமிழும் சரஸ்வதியும்:
ஆரம்பத்தில் கோதைக்கு சாஸ்வதியை மிகவும் பிடித்து இருந்தது என்றாலும், தமிழும் சரஸ்வதியும் சேர்ந்து காதலிக்கும் விஷயத்தை தெரிந்தும் கூட கோதை அவர்களை ஏற்றுக் கொண்டு தான் இருந்தார். ஆனால் சரஸ்வதி தான் கோதைக்கு வந்தது. இதன் விளைவால் கோதை உடல் நலம் சரியில்லாமல் கோமாவிற்கு சென்று விட்டார். அதன் பிறகு மிகவும் போராடி கோதைக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினர். மீண்டு வந்த கோதை தமிழையும், சரஸ்வதியையும் ஏற்றுக் கொண்டார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்வோர் கவனத்திற்கு – தரிசன சேவைகள் ரத்து!
ஆனால் அவர்களுக்கான எந்த உரிமையும் வீட்டில் கிடையாது என்றும் வேலை ஆட்களை போல் தான் வீட்டில் இருக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். இதனால் சரஸ்வதி கோதையின் மனதில் இடம் பிடிக்க அடுத்தடுத்து பல முயற்சிகளையும் செய்து வந்தார். முதல் கட்டமாக 12 வது தேர்வில் 80% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இதனால் மகிழ்ச்சி அடைந்த கோதை இவர்களின் மேல் கொஞ்சம் நம்பிக்கை வைக்க தொடங்கினார்.
அதன்பிறகு வீட்டில் உரிமைகளை பெறுவதற்காக சமையல் செய்யும் திட்டத்தை கையில் எடுத்துள்ளார். இதற்காக சாமியார் போல் ஒருவரை நடிக வைத்து பரிகாரம் செய்ய வேண்டும் என்று பல பொய் நாடகங்களை நடத்தி சரஸ்வதி சமையல் செய்தால் தான் நல்லது என்று கூற வைத்துள்ளார். அதன்படி கோதையும் சரஸ்வதியை சமைக்க அனுமதி கொடுத்துள்ளார். இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.