எழில், அமிர்தா காதலால் வீட்டில் வரும் சிக்கல்கள் – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த திருப்பம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி ராதிகா காதல் ஒரு புறம் இருந்தாலும் எழில் அமிர்தாவின் காதல் காட்சிகள் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. எழில் மீது அமிர்தாவிற்கு காதல் வருவது எல்லாம் இன்றைய எபிசோடில் காட்டப்பட்டது. அதனால் என்ன மாதிரி பிரச்சனைகள் வரும் என்பது பற்றி இனி வரும் எபிசோட் கதையாக இருக்க போகிறது.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபியின் குடும்பத்தை சுற்றியே கதை இருக்கிறது. பாக்கியாவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பத்தையே கோபி ஏமாற்றுகிறார். கோபியை பற்றிய உண்மை எல்லாம் தெரிந்தும் கூட அவருடைய அப்பாவால் எதுவும் செய்ய முடியாத நிலைமை இருக்கிறது. அதனால் கோபியின் ஆட்டத்திற்கு எல்லையே இல்லாமல் இருக்கிறது. கோபி ராதிகா காதல் ஒரு பக்கம் இருந்தாலும் கோபியின் இரண்டாவது மகன் எழில் காதல் மறுபக்கம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது.
Exams Daily Mobile App Download
எழில் அமிர்தாவை காதலித்து திருமணம் செய்து கொள்ள ஆசை படுகிறார். தனது ஆசையை அமிர்தா குடும்பத்தினரிடம் சொல்ல ஆனால் அமிர்தாவிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தை இருப்பதால் அவரால் முதலில் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் அலுவலகத்தில் ஜானு வர அவருக்கு எழில் மீது காதல் இருக்கிறது. அதை தெரிந்து கொண்டு அமிர்தாவிற்கு பொறாமை வருகிறது. அதனால் அமிர்தா எழில் மீது சற்று கோவமாக இருக்கிறார்.
இந்நிலையில் எழில் இன்றைய எபிசோடில் அமிர்தாவிடம் யார் என்ன சொன்னாலும் நான் அமிர்தாவை மட்டும் தான் காதல் செய்வேன் என சொல்ல அமிர்தாவிற்கு நம்பிக்கை வருகிறது. இனி வரப் போகும் எபிசோடுகளில் இருவரும் காதலிக்க ஆனால் இவர்களது திருமணத்திற்கு பயங்கர எதிர்ப்பு வர இருக்கிறது. ஏற்கனவே ஈஸ்வரிக்கு செழியன் காதலித்தது பிடிக்காமல் இருந்தது. தற்போது அமிர்தா விஷயம் தெரிந்து பல பிரச்சனைகள் வர போகிறது.