முல்லைக்கு முன் கர்ப்பமாகும் ஐஸ்வர்யா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் திடீர் திருப்பம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லைக்கு டிரீட்மென்ட் பார்த்து அக்கறையுடன் குடும்பத்தில் அனைவரும் கவனித்து கொள்கின்றனர். முல்லை கர்ப்பமாக இருப்பாரா என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததை அடுத்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பத்தில் பல கஷ்டங்களை தாண்டி சந்தோசத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. முல்லைக்கு குழந்தை வேண்டும் என கஷ்டப்படுவதால் செயற்கை முறை கருத்தரிப்பு செய்ய முடிவு செய்கின்றனர். ஆனால் அதற்கு பணம் அதிகமாக செலவாகும் என்பதால் மூர்த்தி வியாபார பணம் மற்றும் கடன் வாங்கி பணத்தை ஏற்பாடு செய்கிறார். முல்லை சந்தோசம் தான் முக்கியம் என்பதால் பணத்தை பற்றி மூர்த்தி கவலைப்படவில்லை.
இந்நிலையில் முல்லைக்கு நல்லபடியாக டிரீட்மென்ட் முடிய அவரை நடக்க கூடாது என டாக்டர் சொல்கிறார். அதனால் கதிர் அவரை அக்கறையுடன் கவனித்து கொள்கிறார். மேலும் குடும்பத்தில் அனைவரும் முல்லையை அக்கறையுடன் கவனித்து கொள்கின்றனர். அதனால் முல்லை இந்த முறை கட்டாயம் நல்ல செய்தி வரும் என எதிர்பார்த்து இருக்கிறார். ஆனாலும் குடும்பத்தில் இவ்வளவு பணம் செலவு செய்தது மீனாவிற்கு பிடிக்கவில்லை. புது வீட்டிற்கு போகவில்லை என ஐஸ்வர்யாவும் வருத்தமாக இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
மீனாவின் அப்பாவும், தனத்தின் அம்மாவும் பணம் கொடுத்தது பற்றி பேச கதிர் அதை நினைத்து வருத்தப்படுகிறார். ஆனாலும் முல்லை சந்தோசம் முக்கியம் என்பதால் அமைதியாக இருக்கிறார். இந்நிலையில் சீரியலில் முல்லை கர்ப்பமாக இருப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் தற்போது மற்றொரு அதிர்ச்சியான செய்தி வர இருக்கிறது. அதாவது ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்க போகிறார். அதனால் கடையில் அவர் இனி வேலை செய்யாமல் இருக்க கடை வியாபாரம் குறைய போகிறது. இந்த எபிசோடுகள் இனி வரும் வாரங்களில் வர இருக்கிறது.