தமிழகத்தில் பரவும் கண் நோய் – அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை! மருத்துவர்கள் எச்சரிக்கை!
தமிழகத்தில் கடந்த மாதம் வளிமண்டல சுழற்சியால் திடீரென கனமழை பெய்தது. இந்த காலநிலை மாற்றத்தால் டெங்கு, இன்புளுயன்சா உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவியது. அதனை தொடர்ந்து தற்போது மக்கள் கண் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கண் நோய்:
தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவ மழை கொட்டித்தீர்க்கும். அதே போல நடப்பு ஆண்டும் வடகிழக்கு பருவ மழை பெய்ய தொடங்கி விட்டது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் சென்னை நகரம் நீரில் மூழ்கியுள்ளது. சாலைகளில் மழை நீரும் , கழிவு நீரும் கலந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
தற்போது தமிழகத்தில் நிலவி வரும் காலநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட உடல் உபாதைகள் மக்களை சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது சென்னை மக்களுக்கு கண் நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ‘மெட்ராஸ் ஐ’ என்றழைக்கப்படும் கண் நோய் சென்னையில் பரவி வருகிறது. எங்கு பார்த்தாலும் மக்கள் கருப்பு நிற கண்ணாடி மற்றும் துணியால் கண்ணை மறைந்து கொண்டு மருத்துவமனைக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
Whatsapp மட்டும் போதும்.. உங்களின் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் Safe.. இனி பத்திரப்படுத்த தேவையில்லை!
Follow our Instagram for more Latest Updates
கண் உறுத்தல், கண் சிவப்பு நிறமாக மாறுதல், நீர் வடிதல் போன்றவை இந்த கண் நோயின் அறிகுறிகளாகும். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் அதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும். அத்துடன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுத்தமான துணி கொண்டு கண்ணில் இருந்து வரும் நீரை துடைக்க வேண்டும். மேலும் கண்களை விரலால் தேய்க்கவோ, அழுத்தவோ கூடாது. குறிப்பாக மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்து கடைகளில் சொட்டு மருந்து உள்ளிட்டவைகளை வாங்கி பயன்படுத்த கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.