தலைநகரில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – அரசின் அதிரடி உத்தரவு!
சுமார் இரண்டு ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று இன்னும் நம்மை விட்டபாடில்லை. கொரோனாவின் பிறப்பிடமான சீனா இன்னும் இந்த தொற்றின் வீரியத்தை அனுபவித்து வருகிறது. அந்த வகையில் தலைநகர் பெய்ஜிங்கில் அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
முழு ஊரடங்கு:
கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில மாதங்களாக, கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது. ஜீரோ கோவிட் பாலிசியை சீன அரசு கடைபிடித்து வருவதால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு போன்ற கடும் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தலைநகர் பெய்ஜீங், ஷாங்காய், சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில், கொரோனா பரவல் தற்போது கோரத் தாண்டவமாடி வருகிறது. சீனாவின் வணிக மற்றும் நிதி தலைநகராக விளங்கும் ஷாங்காய் நகரில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு தீவிரமடையத் தொடங்கியது.
Exams Daily Mobile App Download
இந்த தொற்றுப் பரவல் காரணமாக ஆறு வாரங்களுக்கும் மேலாக சீனாவில் பொது முடக்கம் நீண்டு உள்ளது. இதனால் அந்நாட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. மிகக் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், ஷாங்காய் நகரில் வசிக்கும் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா தொற்றால் பாதிப்பு நிறைந்த பகுதிகள் அதிகரித்து வருவதால், அங்கு 2.1 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு நியூக்ளிக் அமில பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பெய்ஜிங்கில் ஏப். 30 முதல் பொது இடங்களுக்குச் செல்ல வேண்டுமாயின் அனைவரும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள்!
ஷாங்காய் நகரில் பரவியதைப்போல பெய்ஜிங்கிலும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பெய்ஜிங்கில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மே தின விடுமுறையையொட்டி உணவு மற்றும் போக்குவரத்து சேவைகள் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகளை தற்காலிகமாக நீட்டித்து பெய்ஜிங் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கொரோனா தொற்று குறையும் சமயத்தில், ஊரடங்கில் தளர்வு அளிக்கப்படும் என சீன அரசு தெரிவித்துள்ளது.