தமிழகத்தில் பட்டியலின மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பட்டியலின மாணவர்கள் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பொறியியல் கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது.
பொறியியல் கலந்தாய்வு:
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 446 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் நவம்பர் 10ம் தேதி வரை பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த கலந்தாய்வு மூலம் கல்லூரிகளில் உள்ள 54,278 இடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. நடந்து முடிந்த கலந்தாய்வில் 93,571 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன, அதில் 85,023 இடங்களில் மட்டுமே மாணவர்கள் கல்லூரிகளில் சென்று சேர்ந்துள்ளனர்.
மத்திய அரசின் ரூ.6000 உதவித்தொகை பெற வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க!!
Exams Daily Mobile App Download
மீதமுள்ள இடங்களை நிரப்ப துணை கலந்தாய்வு கடந்த நவம்பர் 9 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு 13 ஆம் தேதி வரை நடந்து முடிந்துள்ளது. அதில் 9500 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் எஸ்சிஏ காலியிடங்களில் எஸ்சி வகுப்பினருக்கான கலந்தாய்வு நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. அதனால் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய பட்டியலின மாணவர்கள் நாளை விண்ணப்பிக்கலாம் என பொறியியல் கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது. அதன் பின் இந்த ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு முடிவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.