10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – மே 17 கடைசி நாள்!
தமிழகத்தில் கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு:
நாடு முழுவதும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கி வரும் இன்சூரன்ஸ் திட்டங்களை போலவே, அஞ்சலகமும் ஆயுள் காப்பீடுகளை வழங்கி வருகின்றது. இது அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் என்ற இரு வகைகளில் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அஞ்சல் காப்பீட்டுக்கு நேரடி முகவர் மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு முகவர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்த பணியிடங்களுக்கு 18-50 வயதுக்கு உட்பட்ட 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட வாரியாத்தால் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலைவாய்பற்ற சுய தொழில் செய்வோர் முன்னாள் ஆலோசகர்களால், முன்னாள் ஆயுள் காப்பீடு முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல பணியாளர்கள் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள், சுய உதவி குழுக்களில் செயல்படுவோர், கிராமதலைவர், கிராமசபை உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்.
ITI, Diploma படித்தவரா? BEL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!
மேலும் இந்த பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும். தேர்வாகும் முகவர்கள் மட்டும் ரூ. 5 ஆயிரத்தை காப்பீட்டு தொகையாக தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் அருகேயுள்ள அஞ்சலகங்களில் பின்னர் செலுத்த வேண்டும். ஏஜென்சி காலம் முடிந்தவுடன் அந்த தொகை வட்டி உடன் திரும்பி வழங்கப்படும். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதில் கூறப்பட்டுள்ள ஆவணங்களுடன் மே 17 ஆம் தேதிக்குள் “முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், கோவில்பட்டி கோட்டம், கோவில்பட்டி- 628501” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும், மேலும் விவரங்களுக்கு தலைமை அஞ்சலகங்கள் 04632-220368, 04636-222312, 04633-222329 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.