விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து விலகிய நடிகை ரூபா ஸ்ரீ – இனி சௌந்தர்யாவாக பிரபல நடிகை!
விஜய் டிவியில் முன்னணி சீரியல்களில் ஒன்று தான் “பாரதி கண்ணம்மா” 700 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் பாரதியின் அம்மாவாக நடித்து வருபவர் நடிகை ரூபா ஸ்ரீ. இந்நிலையில் அவர் சீரியலில் இருந்து விலக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் பலரது மனதை கவர்ந்த முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. பாரதியும் கண்ணம்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டது முதல் கண்ணம்மா கர்ப்பமானது முதல் சீரியலில் பல காதல் எபிசோடுகளாக வந்தது. அதன் பின் கண்ணம்மாவை பாரதி சந்தேகப்பட புரட்சி பெண்ணாக கண்ணம்மா வந்தது தொடங்கி பின் சென்ற மாதம் குழந்தைக்கு அப்பா இல்லை என வருத்தப்பட செண்டிமெண்ட் கலந்து சீரியல் கொண்டு செல்லப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து சீரியலில் கதைக்களம் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்து இருக்கிறது. அதன் படி பாரதி கண்ணம்மா ஒரே இடத்தில் வேலை பார்க்க அவர்களுக்கு இடையே மீண்டும் நெருக்கம் அதிகமாகி இருக்கிறது. மேலும் லக்ஷ்மிக்கு அப்பா யார் என்ற உண்மை தெரிந்தும் கூட அவள் எதுவும் சொல்லாமல் இருப்பது, தன்னை பெற்ற அம்மா கண்ணம்மா தான் என தெரியாமல் ஹேமா கண்ணம்மா மீது பாசம் வைப்பதும் சீரியலில் விறுவிறுப்பை அதிகரித்து இருக்கிறது.
விஜே சித்ராவின் மரணத்திற்கு காரணம் இவர்கள் தான்? கணவர் ஹேம்நாத் புகார்! நீடிக்கும் மர்மம்!
மேலும் இரண்டு புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவர்களை வைத்து கதையில் பெரிய மாறுதல் வர இருக்கிறது. இந்நிலையில் பாரதியின் அம்மாவாக சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடிகை ரூபா ஸ்ரீ நடித்து வருகிறார். கடுமையான அம்மாவாகவும், நல்ல மாமியாராகவும் அவர்நடந்து கொள்வதை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ரூபா ஸ்ரீ சீரியலில் இருந்து விலக இருப்பதாகவும் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.