விஜே சித்ராவின் மரணத்திற்கு காரணம் இவர்கள் தான்? கணவர் ஹேம்நாத் புகார்! நீடிக்கும் மர்மம்!
தமிழ் சின்னத்திரை தொடர்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த விஜே சித்ராவின் மரணத்திற்கு காரணம் சில அரசியல் பிரமுகர்கள் என்று அவரது கணவர் ஹேம்நாத் அளித்துள்ள சமீபத்திய புகார் இந்த வழக்கில் மீண்டும் சந்தேகத்தை உருவாக்கி இருக்கிறது.
விஜே சித்ரா
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா மரணமடைந்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் புரியாத மர்மமாகவே இருக்கிறது. கடந்த 2020ம் வருடம் டிசம்பர் மாதத்தில் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விஜே சித்ரா தமிழ் சின்னத்திரையில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர். விஜய் டிவியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற சீரியலில் நடித்து மக்களின் ஏகப்பட்ட அன்புக்கு சொந்தக்காரராக மாறிய நடிகை சித்ராவுக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர், டான்சர், நடிகை என பன்முகத்திறமை உண்டு. சின்னத்திரையில் கொடி கட்டி பறந்த காலத்தில், ஹேம்நாத் என்பவரை காதலித்து வந்த நடிகை சித்ரா அவருடன் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Exams Daily Mobile App Download
இவரது இறப்பிற்கு அவரது காதலரும், கணவருமான ஹேம்நாத் தான் காரணம் என்றும், அவர் தான் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பின்னர் சித்ராவின் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு அவருக்கு தண்டனையும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், நடிகை சித்ராவின் மரணத்திற்கு தான் காரணம் இல்லை என்றும் அந்த மரணத்தில் முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவரது கணவர் ஹேம்நாத் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
தொடங்கிய ராதிகா, பாக்கியா சண்டை – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் அளித்துள்ள புகாரில், ‘நடிகை சித்ராவும், நானும் சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்தோம். அவரது திடீர் மறைவு எனக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. அவர் இறப்பதற்கு கடைசி மணி நேரங்களை கூட அன்பாக தான் செலவழித்தோம். இப்போது, சித்ராவின் மரணத்திற்கு காரணமாக இருக்கும் சில அரசியல் புள்ளிகள் எனக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். அவர்களில் சிலரது பெயர்களை சித்ரா என்னிடம் கூறி இருக்கிறார். என் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் நேர்ந்தால் அந்த பெயரை நான் வெளியிடுவேன்.
அவர்கள் அரசியலில் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதால் இப்போது எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை. நான் ஒரு வழக்கறிஞர் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளேன். எனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் கூட, என் நம்பிக்கைக்கு உரியவர்கள் அந்த பெயரை வெளியிடுவார்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று நம்பிக்கொண்டிருந்த வேளையில், இதற்கு பின்னால் அரசியல் பிரமுகர்கள் இருப்பதாக எழுந்திருக்கும் குற்றசாட்டுகள் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.