தமிழகத்தில் இனி வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகம் முழுவதும் மாதத்தின் 2-வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம்களை இளைஞர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேலைவாய்ப்பு இயக்குநரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், 2 வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகள் வேலைவாய்ப்பு வெள்ளியாக கருதப்பட்டு வருகிறது. அதாவது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த வகையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 12.08.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம், ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
Prasar Bharati யில் டிகிரி முடித்தவருக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
இம்முகாமில் 8 ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் பெற்றவர்கள் ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் வேலையாளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக நாட்டில் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் நாட்டில் ஊரடங்கு, பொது முடக்கம், போன்றவை அமல்படுத்தப்பட்டது. இதனால் வேலையின்மை, விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகமாக நிலவியது. இதன் காரணமாக இந்தியாவில் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தது. இந்நிலையில் தமிழக அரசு தற்போது வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக பல புதிய தொழில் ஒப்பந்தங்களை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.