வாக்காளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் – தேர்தல் ஆணையம்!!
இந்தியாவின் 5 மாநிலங்களில் நடப்பு ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
இந்தியாவில் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் நடப்பு ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில், தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தேர்தலை பற்றிய அறிவிப்புகளை கடந்த வாரத்தில் மத்திய அரசு வெளியிட்டது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் தொடங்கிவிட்டது.
தேர்தல் பணி விலக்கு கோரும் ஆசிரியர்கள் – CEO முக்கிய அறிவிப்பு!!
கொரோனா அச்சம்:
கடந்த 2019ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொரோனா தொற்று நோய் பரவி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் அனைத்தும் ஊரடங்கு முறையை பின்பற்றியது. இதனால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக அனைத்து இடங்களிலும், தகுந்த நோய்த்தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது.
தேர்தல் ஆணைய அறிவிப்பு:
தேர்தல் ஆணையம் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல முன்னேற்பாடுகளை செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், அரசு பணியாளர்களை தேர்தல் பணிக்கான நியமிக்கும் பணிகளும் தொடங்கி விட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணையம், தேர்தல் நாள் அன்று வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வந்தால் தான் வாக்களிக்க அனுபமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்