வங்கி செல்லுவோர் கவனத்திற்கு – வரும் 27ம் தேதி சேவைகள் நிறுத்தி வைப்பு! போராட்ட எதிரொலி!

0
வங்கி செல்லுவோர் கவனத்திற்கு - வரும் 27ம் தேதி சேவைகள் நிறுத்தி வைப்பு! போராட்ட எதிரொலி!
வங்கி செல்லுவோர் கவனத்திற்கு - வரும் 27ம் தேதி சேவைகள் நிறுத்தி வைப்பு! போராட்ட எதிரொலி!
வங்கி செல்லுவோர் கவனத்திற்கு – வரும் 27ம் தேதி சேவைகள் நிறுத்தி வைப்பு! போராட்ட எதிரொலி!

தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் புதிய தொழிலாளர் கொள்கை சட்டம் அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் பணி நேரம் மற்றும் பணி நாட்களில் பெரிய மாற்றங்களை கொண்டு வர உள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

விடுமுறை நாட்கள்

இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வருகின்றன. மாதந்தோறும் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதுமட்டுமின்றி, ஏதேனும் பண்டிகை தினம் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூட வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றன. கடந்த 2010ம் ஆண்டு வங்கி பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பல சிறப்பான அம்சங்கள் இல்லாத காரணத்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் படுத்தப்பட வேண்டும் என வங்கி ஊழியர்கள் சமீப காலமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் அரசு வங்கி ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வலியுறுத்தி வருகின்றன. அதுமட்டுமின்றி, முதலீட்டு சந்தை, ரிசர்வ் வங்கி மற்றும் LIC வாரத்தில் ஐந்து நாள் மட்டுமே இயங்கி வருகிறது, ஆனால் வங்கிகள் மட்டும் ஆறு நாட்கள் வரை செயல்படுகிறது என NCBE பொதுச் செயலாளர் எஸ்.கே. பந்த்லிஷ் கூறியிருக்கிறார். இப்படி பல கோரிக்கைகளை முன் வைத்து வங்கி ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. வரும் 27 ம் தேதி 9 வங்கி ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளன.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு! விவரம் இதோ!

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் உள்ளிட்ட பல சங்கத்தினர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், இந்த போராட்டத்தில் 9,00,000 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மாற்று வழிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஜூலை 1ஆம் தேதி முதல் புதிய தொழிலாளர் கொள்கை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளன.இந்த நிலையில் பணி நேரம், பணி நாட்களில் பெரிய மாற்றங்களை கொண்டு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. போராட்டம் நடைபெற இருப்பதால் வங்கியில் சேவைகள் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!