தமிழகத்தின் இம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலின் தேர்த்திருவிழா இன்று நடைபெறுவதால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் என்கிற பிரசித்தி பெற்ற கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் இக்கோயிலில் மிக பிரமாண்டமாக திருவிழா நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவளின் காரணமாக பக்தர்கள் யாரையுமே கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. இந்த வருடம் தான் கொரோனா பரவல் சற்று குறைந்ததால் கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
IPL சீசன் 15: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் இணைந்த ‘தல’ தோனி – சூரத்தில் தொடங்கிய பயிற்சி!
ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் மாசி மாதம் பூச்சொரிதல் திருவிழா மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக இந்த கோவிலின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இன்று விமர்சையாக தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் இந்த தேர் திருவிழாவில் கலந்துகொண்டுள்ளனர். பலரும் இந்த கோவிலுக்கு அக்கினி சட்டி எடுத்தல், மாவிளக்கு, பால்குடம் எடுத்தல் முதலான நேத்திக்கடன்களை செய்து முடித்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வு – ஹோலி அன்று பிரதமர் அறிவிப்பு?
இதனால் கோவிலை சுற்றியுள்ள பகுதி முழுவதுமே மக்களின் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த திருவிழா வரும் மார்ச் 15 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதால், அந்த பகுதி முழுவதுமே திருவிழா முடியும் வரை போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.