IPL சீசன் 15: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் இணைந்த ‘தல’ தோனி – சூரத்தில் தொடங்கிய பயிற்சி!

0
IPL சீசன் 15: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் இணைந்த 'தல' தோனி - சூரத்தில் தொடங்கிய பயிற்சி!
IPL சீசன் 15: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் இணைந்த 'தல' தோனி - சூரத்தில் தொடங்கிய பயிற்சி!
IPL சீசன் 15: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் இணைந்த ‘தல’ தோனி – சூரத்தில் தொடங்கிய பயிற்சி!

15வது IPL சீசனுக்கான பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டன் MS தோனி சூரத்திற்கு வருகை தந்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

கேப்டன் தோனி

வரும் மார்ச் 26ம் தேதியன்று துவங்க இருக்கும் இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டத்தை, கேப்டன் MS தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி துவங்க இருக்கிறது. IPL கிரிக்கெட் போட்டிகளில் 4 முறை சாம்பியனான CSK அணி, இந்த சீசனில் பல புதிய இளம் வீரர்களுடன் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியுடன் களம் காண இருக்கிறது. இந்த முறை 2 புதிய அணிகளின் வருகையால் CSK அணியின் நட்சத்திர வீரர்களான பாஃப் டூ பிளேஸி, ஷர்துல் தாகூர் ஆகியோர் இம்முறை அணியில் இடம்பிடிக்கவில்லை.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.80 வரை திடீர் உயர்வு – இன்று முதல் அமல்!

என்றாலும் கேப்டன் MS தோனி தலைமையில் செயல்படும் CSK அணி தனது முழு பலத்துடன் இந்த சீசனில் காணப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனுடன் கொரோனா பரவலை முன்னிட்டு இந்த IPL சீசன் முழுவதும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஸ்டேடியங்களில் வைத்து மட்டுமே நடத்தப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் CSK அணியின் கேப்டன் MS தோனி தனது பயிற்சி ஆட்டத்திற்காக சூரத்தில் முகாம் அமைத்துள்ள தனது குழுவுடன் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளை (மார்ச் 8) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

வழக்கம் போல சென்னையில் தனது பயிற்சி ஆட்டத்தை நடத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியினர், இந்த முறை மஹாராஷ்டிராவில் வைத்து போட்டிகள் நடத்தப்பட இருப்பதால் தங்களது பயிற்சிகளை சூரத்தில் வைத்து நடத்த திட்டமிட்டுள்ளனர். இப்போது பயிற்சி ஆட்டத்திற்காக சூரத்திற்கு வருகை தந்துள்ள MS தோனியின் புகைப்படத்தை ‘நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த தல தோனி! Day1: #WhistlePodu #SingamsInSurat’ என்ற கேப்ஷனுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி நிர்வாகம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படம் மற்றும் ஹேஷ்டேகுகள் அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!