தமிழகத்தில் நாளை மறுநாள் ( மே 20) உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
கொரோனா தொற்று காரணமாக நடத்தப்படாமல் இருந்த ஊட்டி மலர் கண்காட்சி, 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் நடத்தப்பட உள்ளது. இந்த 124 வது மலர் கண்காட்சி வரும் 20ந்தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. மேலும் மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இது தொடர்பாக நீலகிரி கலெக்டர் அம்ரித் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு:
தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காகவே, வருடந்தோறும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகு போட்டி, படகு அலங்காரம், குன்னூரில் பழக் கண்காட்சி, உட்பட கோடை விழாக்கள் நடத்தப்பட்டும் வருகின்றன. இதில், மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி, காய்கறி கண்காட்சி மட்டும் தோட்டக்கலைத்துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மலர் கண்காட்சி மிகவும் பிரபலமானது. இந்த மலர்க்கண்காட்சியை தமிழக ஆளுநர் தான் வருடா வருடம் துவக்கி வைப்பார். கண்காட்சியை காண வெளிநாடுகளில் இருந்து கூட பயணிகள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக கோடை சீசன் மற்றும் கண்காட்சிகள் நடைபெறவில்லை தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து காணப்படும் நிலையில், மலர் கண்காட்சி உட்பட பல்வேறு கண்காட்சிகள் மற்றும் கோடை விழாக்கள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 124 வது மலர் கண்காட்சி வரும் 20ந்தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதனிடையே மலர் கண்காட்சிக்காக கடந்த ஜனவரி மாதமே மலர் செடிகள் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பூங்கா முழுவதும் 275 வகைகளில் 5.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.
இதுதவிர மலர் மாடங்கள், கண்ணாடி மாளிகையில் காட்சிப்படுத்துவதற்காக 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வண்ண மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த 124 வது மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டியில் நாளை மறுநாள் (20ம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி கலெக்டர் அம்ரித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 124 வது மலர் கண்காட்சி, 20 முதல் 24 வரை நடக்கிறது. இதை தொடர்ந்து, நாளை மறுநாள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 20-ந் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இந்த உள்ளூர் விடுமுறை நாளினை ஈடு செய்ய ஜூன் 4ம் தேதி பணி நாளாக இயங்கும் என அறிவித்துள்ளார்.