பிறந்தநாளில் கலந்து கொள்ளாமல் ஆபிஸ் செல்லும் கோபி, கோவப்பட்ட ஈஸ்வரி – “மகா சங்கமம்” சீரியலில் இன்றைய எபிசோட்!

0

பிறந்தநாளில் கலந்து கொள்ளாமல் ஆபிஸ் செல்லும் கோபி, கோவப்பட்ட ஈஸ்வரி – “மகா சங்கமம்” சீரியலில் இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி வீட்டில் மாட்டி இருக்கும் புகைப்படங்களை பார்த்து கோபி எப்படி மறைப்பது என தெரியாமல் இருக்கிறார். பின் பிறந்தநாளுக்கு அனைவரும் ஒரே மாதிரி உடை அணிந்து கிளம்புகின்றனர். பின் தாத்தாவின் பிறந்தநாளுக்கு வேலைக்கு செல்வதாக சொல்ல ஈஸ்வரி அதை கேட்டு கோபப்படுகிறார்.

மகா சங்கமம்:

இன்று மகா சங்கமம் சீரியலில், கோபி வீட்டில் அலங்காரம் செய்ததை பார்த்து பதட்டம் அடைகிறார். பின் எப்படி ராதிகாவிடம் இருந்து இந்த புகைப்படங்களை மறைக்க போகிறோம் என தெரியாமல் இருக்கிறார். பின் திட்டமிட்டு அலங்காரம் செய்வது சரி இல்லை என சொல்லி ஆட்களை வர சொல்கிறார். அவர்களிடம் நீங்க இந்த புகைப்படங்களை மறைத்து அலங்காரம் செய்ய வேண்டும் என சொல்கிறார். பின் அந்த ஆட்கள் புகைப்படத்தை மறைத்து அலங்காரம் செய்கின்றனர்.

அப்போது மூர்த்தி பார்த்துவிட்டு நீங்க போட்டோவை ஏன் மறைத்துவிடுகிறீர்கள் என கேட்கிறார். அப்போது இந்த விஷயம் மாமாவிற்கு தெரிந்தால் எப்படி வருத்தப்படுவார் என தெரியுமா என சத்தம் போட அப்போது கோபி வந்து நான் தான் சொன்னேன் என சொல்கிறார். பின் மூர்த்தி கோபி நடந்து கொள்வதை பார்த்து குழப்பத்தில் இருக்கிறார். பின் செல்வி கோபியின் நடவடிக்கை பற்றி செல்வி சொல்ல வருகிறார். அப்போது பாக்கியா இவள் என்னிடம் மட்டும் தான் இப்படி எல்லாம் பேசுகிறார். வேலை பார்ப்பவரை சரியாக நடத்த வேண்டும் என சொல்கிறார்.

செல்வி எழில் தம்பி படம் எடுப்பதால் தான் கோபி சார் பேசாமல் இல்லை. அவருக்கும் எழிலிற்கும் வேற பிரச்சனை இருக்கிறது. சாருக்கு வேற பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. அது தான் காரணமாக இருக்கும் என சந்தேகமாக இருப்பதாக செல்வி சொல்கிறார். அதை நினைத்து மூர்த்தி தனம் வருத்தப்படுகின்றனர். பின் அனைவரும் கிளம்பி வர எல்லாரும் ஒரே மாதிரி உடையில் இருக்கின்றனர். பின் கோபி பிறந்தநாளில் இல்லாமல் எப்படி தப்பிப்பது என தெரியாமல் இருக்கிறார்.

அப்போது ஈஸ்வரியிடம் முக்கியமான வேலை இருப்பதாகவும் அதனால் ஆபிஸ் செல்ல இருக்கிறேன் என சொல்கிறார். ஆனால் ஈஸ்வரி பிறந்தநாளுக்கு கூட இல்லாமல் என்ன செய்ய போகிறாய் என கேட்கிறார். பின் முக்கியமான வேலை இருப்பதாக கோபி சொல்ல, போன வருஷம் போல இல்லை இந்த வருஷம் இப்படி இருக்கிறார் அடுத்த வருஷம் இருப்பாரா என தெரியவில்லை என சொல்கிறார். பின் கோபி பிறந்தநாளில் இல்லாமல் இருந்தால் நான் உன்னுடன் பேசவே மாட்டேன் என சொல்கிறார்.

கண்ணம்மா மீது அக்கறையாக இருக்கும் பாரதி, சந்தோஷத்தில் சௌந்தர்யா – “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்றைய எபிசோட்!

அதை கேட்டு கோபி வருத்தப்படுகிறார். பின் பிறந்தநாளுக்கு அனைவரும் கிளம்பி இருக்கின்றனர். அப்போது பாக்கியாவின் அம்மா வர ஐஸ்வர்யாவும் மீனாவும் வரவேற்க காத்திருக்கின்றனர். அப்போது பாக்கியாவின் அம்மா நீங்க யார் என கேட்கிறார். அப்போது இனியா இது என்னுடைய பாட்டி என சொல்கிறார். பின் ஜெனியின் அம்மா வர நீங்க ஜெனி அம்மா தான என ஐஸ்வர்யா கண்டுபிடிக்கிறார். பின் அனைவரும் சந்தோசமாக பிறந்தநாளுக்கு தயாராகி இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!