CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி முறையில் பொதுத்தேர்வு? நாளை விசாரணை!

0
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி முறையில் பொதுத்தேர்வு? நாளை விசாரணை!
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி முறையில் பொதுத்தேர்வு? நாளை விசாரணை!
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி முறையில் பொதுத்தேர்வு? நாளை விசாரணை!

கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்த நிலையில் இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி முறையில் பொதுத் தேர்வுகள் நடத்த சிபிஎஸ்இ முடிவு எடுத்துள்ளது. ஆனால் இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் கடந்த 2020ம் ஆண்டு சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டும் நேரடி முறையில் பொதுத்தேர்வு நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் மதிப்பெண்களை வேறு வழிகளில் வழங்க ஆலோசனை மேற்கொள்ளுமாறு தெரிவித்தது. தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்கள் கவனத்திற்கு – பிப்.25 முதல்..!

மேலும் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதனால் மாணவர்களுக்கு தொற்று ஏற்படும் விகிதம் குறையும் என்பதால் இந்த ஆண்டு நேரடி முறையில் நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. அதன்படி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 26ம் தேதி பொதுத்தேர்வுகளை நடத்த உள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நேரடியாக நடத்த கூடாது என்று சமூக ஆர்வலர் அனுபா ஸ்ரீவஸ்தவா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறை இதோ!

இந்த மனுவில் குறிப்பிட்டவாறு, உச்ச நீதிமன்றம் அறிவித்தபடி கடந்த ஆண்டு அனைத்து பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்தாலும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேரடி முறையில் தேர்வு நடத்தாமல் மாற்று வழியில் மதிப்பெண் வழங்கும் முறையை பற்றி ஆலோசனை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அத்துடன் விரைவாக தேர்வு முடிவுகளை அறிவித்து மாணவர்களின் அடுத்தக்கட்ட படிப்புகளை தொடங்குவதற்கான தேதியும் வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவிற்கான விசாரணை நாளை நடைபெற உள்ளது. அதன்படி அடுத்தக்கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!