தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் – காவலர்களுக்கு பாராட்டு! டி.ஜி.பி சுற்றறிக்கை!

0
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் - காவலர்களுக்கு பாராட்டு! டி.ஜி.பி சுற்றறிக்கை!
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் - காவலர்களுக்கு பாராட்டு! டி.ஜி.பி சுற்றறிக்கை!
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் – காவலர்களுக்கு பாராட்டு! டி.ஜி.பி சுற்றறிக்கை!

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாளில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து காவலர்களுக்கும் டி.ஜி.பி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

பாராட்டு:

தமிழகத்தில் உருமாற்றம் அடைந்த புதிய வகை ஓமிக்ரான் வைரஸ் கொரோனா மூன்றாம் அலையை பரவி பாதிப்புகளை அதிகப்படுத்திய வண்ணம் உள்ளது. இதனை குறைக்கும் முயற்சியாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் நோய் பரவல் குறித்தும் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு புதிய கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

1 – 9ம் வகுப்பு வரை இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை | அரசு அதிரடி அறிவிப்பு!

இதுவரை ஜன.6, ஜன.16 ஆகிய 2 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த முழு ஊரடங்கின் போது பால், காய்கறி, மளிகை, உணவு விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இரண்டு நாட்களில் விதிகளை மீறியதாக ரூ.78,34,900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிகளை மீறியதாக 1614,951 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.பி சைலேந்திரபாபு தகவல் தெரிவித்துள்ளார்.

World Badminton Rankings: 13வது இடத்தை பிடித்த இந்திய வீரர் – ரசிகர்கள் பாராட்டு மழை!

மேலும் 9, 16ம் தேதிகளில் முழு ஊரடங்கு நாட்களில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் பாதுகாப்பு பணி சிறப்பாக நடைபெற்றது. காவலர்கள் பொறுப்புடனும், மரியாதையுடனும், மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டுள்ளனர். அதனால் அனைத்து காவலர் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு நாளில் ஆட்டோ மற்றும் டாக்சிகளில் பயணிக்கும் பொது மக்களுக்கு அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் பயணிக்கும் வசதியை காவலர்கள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!