திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டோர் கவனத்திற்கு – இரவு நேர ஊரடங்கு அமல்!
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. அதனால் மாநில வாரியாக கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இரவுநேர ஊரடங்கு அமல்:
நாடு முழுவதும் தற்போது கொரோனா 3வது அலை தொடங்கியுள்ளது. அதாவது கடந்த செப்டம்பர் மாதம் முதல் குறைந்து வந்த கொரோனா பெருந்தொற்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்றை தொடர்ந்து மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த ஓமைக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் – காவலர்களுக்கு பாராட்டு! டி.ஜி.பி சுற்றறிக்கை!
அந்த வகையில் தற்போது ஆந்திரா மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து வருவதால் நேற்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தினசரி இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 11 மணிக்கு பிறகு மாநில எல்லைகளில் அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இரவு 11 மணிக்குள் அந்த சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 – 9ம் வகுப்பு வரை இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை | அரசு அதிரடி அறிவிப்பு!
அதனை தொடர்ந்து திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயில்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையே கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. பொது நிகழ்ச்சிகளில் 20 பேரும், திருமணம், காதுகுத்து, இறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய இரவுநேர ஊரடங்கு தற்போது திருப்பதியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.