1 – 9ம் வகுப்பு வரை இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை | அரசு அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 3ம் அலை வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. தற்போது கர்நாடகா மாநில அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அத்துடன் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. அதன்படி தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஓமைக்ரான் பரவலை தடுக்க பொதுமுடக்கம் அமல் – உலக சுகாதார அமைப்பு விளக்கம்!
இந்நிலையில் கர்நாடகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அம்மாநில அரசு அறிவித்து வருகிறது. இதில் குறிப்பாக இரவு நேர மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிப்பு அடைந்துள்ளனர். அதிலும் சிவமொக்கா நகரில் ஒரே வாரத்தில் 108 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
அதனால் பெற்றோர்கள் மிகவும் அச்சத்துடன் இருக்கின்றனர். அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து மாவட்ட பொறுப்பு மந்திரி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரியான ஈசுவரப்பா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, சிவமொக்கா நகரில் கொரோனாவால் மாணவர்கள் அதிகம் பாதிப்பு அடைந்துள்ளனர். ஆகையால் மாணவர்களின் நலன் கருதி இங்குள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் 21ம் தேதி வரை என 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.