பாக்கியாவை எதிர்த்து ராதிகாவை திருமணம் செய்து கொண்ட கோபி – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பல கிளைக்கதைகள் உள்ள போதிலும், கோபி ராதிகாவின் கதை என்பது மிகவும் விறுவிறுப்பாக சென்று வருகிறது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாக்கியலட்சுமி தொடரில் பல திருப்பங்கள் அடுத்தடுத்து வர உள்ளது.
குடும்பத்தினர் அதிர்ச்சி:
பாக்கியலட்சுமி சீரியலில் குடும்பத்தின் பெரிய ஆதரவு ஒன்றும் இல்லாமல், சரியாக படித்திருக்காத பாக்கியா என்ற குடும்ப தலைவி தனது கனவை நோக்கி பயணிக்கும் பாதையில் சந்திக்கும் கஷ்டங்களை மையமாக வைத்து தான் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. தனது பள்ளி வயது முதல் தோழியை காதலிக்கும் கோபி, தனது அப்பாவின் கட்டாயத்தால் அவரின் நண்பரின் மகளான பாக்கியாவை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொள்வார். திருமணம் முடிந்து பல வருடங்கள் கழித்து 3 பிள்ளைகள் இருந்த போதிலும், தனது மகனுக்கும் திருமணம் முடிந்து விட்ட போதிலும் பாக்கியாவை மனதார ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் கதாபாத்திரம் கோபி.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் சுஜிதாவின் பொங்கல் கொண்டாட்டம் – வைரல் வீடியோ!
இவர் பல வருடங்கள் கழித்து பள்ளி காதலி ராதிகாவை சந்திக்கிறார். ராதிகாவிற்கு திருமணம் முடிந்து பெண் குழந்தை உள்ளது. ஆனால் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனியாக வசித்து வருகிறார். ராதிகாவிற்கு ஏதோ ஆபத்தான சூழ்நிலையில் உதவு செய்ய போய் பின்னர் தொடர்ந்து பழக தொடங்குகிறார் கோபி. இது தெரிந்து ராதிகாவின் அம்மா கோவப்பட, தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு ராதிகாவை கட்டாயம் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் சுஜிதாவின் பொங்கல் கொண்டாட்டம் – வைரல் வீடியோ!
தற்போது ராதிகாவின் அம்மா இவர்களின் திருமணத்தை விரைவில் நடத்த வேண்டும் என்று கூறுகிறார். இதனால் கோபியும் தனது குடும்பத்திற்கு தெரியாமல் ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். இந்த விஷயம் பாக்கியா உட்பட குடும்பத்தினருக்கு தெரிய வருகிறது. இதனால் மொத்த குடும்பமும் கடும் அதிர்ச்சி அடைகின்றனர். பாக்கியாவின் தோழியாக உள்ள ராதிகாவை தான் கோபி திருமணம் செய்துள்ளார் என்பது கூடுதல் அதிர்ச்சியான விஷயமாக உள்ளது. இது தொடர்பான காட்சிகள் தான் இனி பல திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியலில் வர உள்ளது.