புகார்களை பதிவு செய்ய வாட்ஸ்அப் சாட்போட் – டெல்லி அரசு அறிவிப்பு!!

0
புகார்களை பதிவு செய்ய வாட்ஸ்அப் சாட்போட் - டெல்லி அரசு
புகார்களை பதிவு செய்ய வாட்ஸ்அப் சாட்போட் - டெல்லி அரசு
புகார்களை பதிவு செய்ய வாட்ஸ்அப் சாட்போட் – டெல்லி அரசு அறிவிப்பு!!

குழந்தை உரிமைகள் குறித்த புகார்களை பதிவு செய்வதற்கு வாட்ஸ்அப் சாட்போட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக டெல்லி அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த வாட்ஸ்அப் சாட்போட் பிப்ரவரி 1 முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

வாட்ஸ்அப் சாட்போட்

இன்றைய இணையதள உலகில், பல்வேறு வகையான சேவைகளை நம் கைகளில் இருக்கும் மொபைல் போன்கள் மூலம் நம்மால் எளிதாக பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக, அரசின் சேவைகள் கூட இப்போது மொபைல் ஆப்களில் வந்து விட்டது. இதனால் மக்களின் நேரம் வீணாவது குறைவதுடன், எளிமையாக சில விஷயங்களை அணுகவும் முடிகிறது. அந்த வகையில், குழந்தை உரிமைகள் குறித்த புகார்களை பதிவு செய்வதற்கு வாட்ஸ்அப் சாட்போட் ஒன்றை டெல்லி அரசாங்கம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

சென்னை மக்கள் கவனத்திற்கு – போக்குவரத்தில் முக்கிய மாற்றம்!!

Follow our Instagram for more Latest Updates

இது குறித்து குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான டெல்லி ஆணையம் கூறுகையில், புதிய வாட்ஸ்அப் சாட்போட் குழந்தை உரிமைகள் தொடர்பான புகார் பதிவு, தகவலை தேடுதல் மற்றும் புகார் நிலையைக் கண்காணிப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது. இது பொதுமக்கள் மற்றும் கமிஷன் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள பாலமாக அமையும் என தெரிவித்துள்ளது. இந்த வாட்ஸ்அப் சாட்போடை டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பிப்ரவரி 1 ஆம் தேதியன்று அறிமுகம் செய்து வைக்க இருக்கிறார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!