சென்னை மக்கள் கவனத்திற்கு – போக்குவரத்தில் முக்கிய மாற்றம்!!
சென்னையின் உஸ்மான் சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற இருப்பதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அடுத்த 9 மாதங்களுக்கு பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாததாக மாறி விட்டது. சென்னையில் காணப்படும் இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னையின் முக்கிய பகுதியான உஸ்மான் சாலையில் தற்போது புதிய மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக உஸ்மான் சாலை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
அதாவது, தெற்கு உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணாமலை சி.ஐ.டி 1 ஆவது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் தெற்கு உஸ்மான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 28.01.2023 முதல் 27.09.2023 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அண்ணாசாலை சிஐடி 1ஆவது மெயின் ரோடு வழியாக தியாகராய நகர் பேருந்து நிறுத்தத்திற்கு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக திருக்கோயில்களில் உண்டியல் எண்ணிக்கை விவகாரம் – அறநிலையத்துறை ஆணையரின் முக்கிய உத்தரவு!
தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் இருந்து அண்ணாசாலை சிஐடி 1 ஆவது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, கண்ணமாபேட்டை சந்திப்பு, தெற்கு மேற்கு போக்கு சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை மூலம் அண்ணா சாலையை சென்றடைய வழி செய்யப்பட்டுள்ளது. மேலும், அண்ணாசாலை செல்லவேண்டிய பேருந்துகள் அனைத்தும் மேட்லி சந்திப்பு, பார்கிட் சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வழியாக திருப்பிவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.