IBM நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் – 3,900 பேர் பணிநீக்கம்!!
பிரபல கணினி தொழில்நுட்ப நிறுவனமான IBM சுமார் 3,900 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் வருடாந்திர இலக்கை தவறவிட்டதால் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
பணிநீக்க அறிவிப்பு
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான IBM (இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன்) தனது ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்நிறுவனம் தனது ஒட்டுமொத்த ஊழியர்களில் சுமார் 3,900 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கை, நிறுவனம் தனது வருடாந்திர இலக்கை தவறவிட்டதால் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புகார்களை பதிவு செய்ய வாட்ஸ்அப் சாட்போட் – டெல்லி அரசு அறிவிப்பு!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த பணிநீக்கங்கள் நிறுவனத்தில் Kyndryl வணிகத்தின் ஸ்பின்ஆஃப் மற்றும் AI யூனிட் வாட்சன் ஹெல்த் பிரிவுகளை பாதிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த அடிப்படையில், பணிநீக்கம் மூலம் ஒட்டு மொத்த ஊழியர்களில் சுமார் 1.5% பேர் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இப்போது 3 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ததன் மூலம் IBM நிறுவனம், டிவிட்டர் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் மாஸ் பணிநீக்க பட்டியலில் இணைந்துள்ளது கவனிக்கத்தக்கது.