TCS நிறுவனத்திற்கு வந்த ஆபத்து – பல லட்ச ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு!
இந்தியாவில் பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ் 2015ஆம் ஆண்டுத் திருமலை செல்வன் சண்முகம் என்பவரை பணி நீக்கம் செய்தது. இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இது TCS ஊழியருக்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த ஐடி ஊழியருக்கு ஜாக்பாட்டாக உள்ளது.
ஊழியர் பணி நீக்கம்:
இந்தியாவில் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் நோய்த் தடுப்பு பணியாக விதிக்கப்பட்ட ஊரடங்கு போன்ற காரணத்தினால் தொழில் துறை வீழ்ச்சியை சந்தித்தது. தொற்று அச்சத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாத நிலை ஏற்பட்டதால் பெரும்பாலும் மக்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வாயிலாக அனைத்து வேலைகளையும் செய்ய முற்பட்டனர். அதனால் ஐடி துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்தது. மேலும் பிரபல நிறுவனங்கள் ஊதியத்தையும் அதிகரித்தது. இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தில் ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வந்துள்ளது.
Exams Daily Mobile App Download
கடந்த 2015ம் ஆண்டு ஆண்டுத் திருமலை செல்வன் சண்முகம் என்பவரை பர்பாமென்ஸ் காரணம் காட்டி பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்துச் அவர் சென்னை லேபர் கோர்ட்-ல் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் பலகட்ட விசாரணையில் டிசிஎஸ் நிறுவனம் அளிக்கப்பட்ட விளக்கங்களும் ஏற்புடையதாக இல்லை அதனால் பணியில் இருந்து நீக்கப்பட்டவரை 7 வருடம் எவ்விதமான விடுப்பும் இல்லாத வகையில் பணியில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு பணிநீக்கம் செய்யப்படும் அனைத்து ஐடி ஊழியர்களுக்கும் ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.
இந்திய விமான படையில் அக்னிவீர்வாயு ஆள்சேர்ப்பு அறிவிப்பு 2022 – முழு விவரங்களுடன்..!
TCS இந்தியத் தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றானதால், இனி இத்துறையில் பணி நீக்கம் நடவடிக்கைகள் பெரும் தாக்கத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் ஐடி ஊழியர்களுக்கான சங்கங்களும் தொடர்பில் இருந்தது இந்த வழக்கின் வெற்றி ஐடி ஊழியர்களுக்கான யூனியனின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் உணர்த்தி உள்ளது. இனி எந்தொரு இந்திய ஐடி நிறுவனங்களும் எளிதாக ஊழியர்களை மட்டமான காரணங்களையும், பர்பாமென்ஸ் காரணம் காட்டி பணி நீக்கம் செய்ய முடியாது. தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு திருமலை செல்வன் வெற்றி அவருடைய வெற்றி பல லட்சம் ஐடி ஊழியர்களுக்கான வெற்றியாக பார்க்கப்படுகிறது.