Daily Current Affairs March 6, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs March 6, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs March 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 06 மார்ச் 2021

தேசிய நிகழ்வுகள்

புது டெல்லியில் உலகளாவிய புத்தக கண்காட்சியினை திறந்து வைத்த அமைச்சர் ரமேஷ் போக்கிரியால்!!

  • உலகளாவிய புத்தக கண்காட்சி வரும் மார்ச் 6 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தக கண்காட்சியினை மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் போக்கிரியால் திறந்து வைத்தார்.
  • இந்த புத்தக கண்காட்சி புத்தகம் வசிப்பவர்களை மேலும் ஊக்குவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி மூலமாக புத்தக பதிப்பாளர்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி புத்தகம் வசிக்கும் திறனை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

DRDO யின் புதிய தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!!

  • இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ராணுவனத்திற்கு தேவையான ஏவுகணை உள்ளிட்ட தடவாளங்களை மேம்படுத்தியுள்ளது.
  • அந்த வகையில் தற்போது மேம்படுத்தப்பட்ட ராம்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பத்தை (Fuel Ducted Ramjet (SFDR) technology) பயன்படுத்தி புதிய ஏவுகணை ஒன்றினை தயாரித்து அதனை சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணையை ஒடிஷா மாநிலத்தின் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவியுள்ளது.

DRDO பற்றி

நிறுவகிக்கப்பட்டது – 1958

தலைமையகம்புது டெல்லி

ஒரு வருடத்திற்கு மக்கள் வீணடிக்கும் உணவின் அளவு குறித்த ஆய்வு முடிவுகள் வெளியீடு!!

  • கடந்த 2019 ஆம் ஆண்டு உலகத்தில் தோராயமாக 93.1 கோடி டன் உணவு பொருள் வீணடிக்கப்பட்டுள்ளதாக உணவு குறியீடு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் மட்டும் 6.8 கோடி டன் உணவு வீணடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனி நபரும் ஒரு வருடத்திற்கு 50 கிலோ உணவு பொருளை வீணடிப்பதாக இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மொத்தமாக உலகளவில் வீணடிக்கப்பட்ட 93.1 கோடி டன் உணவினை வைத்து மக்கள் 7 முறிய உணவினை அளித்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 2021

சர்வதேச நிகழ்வுகள்

நாட்டின் முதல் இந்தோபிரெஞ்சு இரட்டை பட்டம் திட்டம் அமல்!!

  • நமது நாட்டின் முதல் இந்தோபிரெஞ்சு இரட்டை பட்டம் படிப்பதற்கான திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
  • இது குறித்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டின் இந்திய தூதுவர் இமானுவேல் லெனனின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி ஒடிஷா மாநிலத்தின் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் கல்வி வளாகத்தில் நடைபெற்றது.
  • இந்த திட்டம் மூலமாக இனி பிரான்ஸ் நாட்டின் Emlyon Business School இல் இருந்து முதுகலை பட்டாயபடிப்பினையும், எம்பிஏ படிப்பினை Xavier பல்கலைக்கழத்தில் இருந்து ஒருசேர படிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அரசு செயலி உருவாக்குபவர்களுக்கு என்று ஒரு தேசிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது!!

  • பங்களாதேஷ் அரசு ஆன்லைன் வாயிலாக செயலியை உருவாக்குபவர்களுக்கு என்று தனியாக ஒரு தேசிய இணையத்தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • அரசு உருவாக்கிய bdapps.com என்ற இணையத்தளம் வாயிலாக செயலிகளை உருவாக்குபவர்கள் தங்களது செயலிகளை அதில் பதிவேற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் பங்களாதேஷ் அரசிற்கும் தொலைத்தொடர்பு நிறுவனமான ரோபிக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு கையெழுத்திடப்பட்டது.
  • ICT அமைப்பின் தலைவரான ஜுனைத் அகமது பாலாக் இந்த இணையதளத்தை அறிமுகப்படுத்தினார். பங்களாதேஷ் அரசு அறிமுகப்படுத்தியுள்ள மிக பெரிய இணையதளம் இதுவே ஆகும். இதில் தற்போது வரை 43,000 செயலிகளை 12,000 செயலியை உருவாக்குபவர்கள் உருவாக்கி உள்ளனர்.

பங்களாதேஷ் பற்றி

தலைநகரம்டாக்கா

நாணயம்பங்களாதேஷ் தக்கா

ஜனாதிபதிமுகமது அப்துல் ஹமீத்

பிரதமர்ஷேக் ஹசினா

மாநில நிகழ்வுகள்

தேசிய பாரா நீச்சல் போட்டிகள் கர்நாடகாவில் நடைபெற உள்ளன!!

  • 20 வது தேசிய பாரா நீச்சல் போட்டிகள் கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் வரும் மார்ச் 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போட்டிகளுக்கான பயிற்சியினை கர்நாடகா அரசு வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய நீச்சல் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.

கர்நாடகா பற்றி

முதலமைச்சர்பி.எஸ். யெடியுரப்பா

தலைநகரம்பெங்களூர்

ஆளுநர்வஜுபாய் வாலா

ஒடிஷா மாநில அரசு மற்றும் ஆர்சலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!!

  • ஒடிஷா மாநில அரசு மற்றும் ஆர்சலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனம் 12 மில்லியன் டன் எஃகு ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒடிஷா மாநில முதல்வர் பட்நாயக் தலைமையில் கையெழுத்திடப்பட்டன. அதே போல் இந்த நிகழ்ச்சியில் ஆர்சலர் மிட்டல் நிர்வாகத் தலைவர் எல்என் மிட்டல் முதன்மைச் செயலாளர் (தொழில்கள்) ஹேமந்த் சர்மா மற்றும் ஏஎம் / என்எஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி (தலைமை நிர்வாக அதிகாரி) திலீப் உம்மன் பங்கேற்றனர்.

ஒடிஷா பற்றி

முதல்வர்நவீன் பட்நாயக்

கவர்னர்கணேஷி லால்

தலைநகரம்புவனேஸ்வர்

Download TNPSC Notification 2021 

விளையாட்டு நிகழ்வுகள்

ஸ்பெயினில் நடத்த சர்வதேச குத்துசண்டை போட்டியில் அமித் பங்கல் வெள்ளி வென்றார்!!

  • ஸ்பெயின் நாட்டில் சர்வதேச குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் அமித் பங்கல் பங்கேற்று விளையாடினார்.
  • அரையிறுதியில் வெற்றி பெற்று முன்னேறிய அமித் நடந்து முடிந்த இறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் எஸ் கோப்பரை எதிர்கொண்டார்.
  • இறுதி போட்டியில் தோல்வி அடைந்த அமித் பங்கல் வெள்ளி வென்றுள்ளார்.

டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள்ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் புதிய சாதனை!!

  • டி-20 போட்டிகளில், 100 சிக்ஸர்களை அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச்.
  • நியூசிலாந்திற்கு எதிரான 4வது டி-20 போட்டியில், 4 சிக்ஸர்களை விளாசியதன் மூலம், இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். மேலும், உலகளவில் இந்த சாதனையை நிகழ்த்தும் 6வது பேட்ஸ்மென் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.
  • மேலும், டி-20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களின் பட்டியலிலும், டேவிட் வார்னரை பின்னுக்குத் தள்ளி, முதலிடம் பிடித்துள்ளார் ஆரோன் பின்ச்.

முக்கிய நாட்கள்

உலக பல் மருத்துவர்கள் தினம் 2021!!

  • ஒவ்வொரு வருடமும் மார்ச் 6 ஆம் தேதிஉலக பல் மருத்துவர்கள்தினமாக கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் மக்கள் தங்களது பல் மருத்துவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
  • இந்த நாளில் மக்கள் பல் மருத்துவம், பல் பரிசோதனை பற்றிய விழிப்புணர்வினை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Download CA Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!