தமிழகத்தில் ஓய்வூதியர்களுக்கு 14% அகவிலைப்படி? அரசுக்கு வலியுறுத்தல்!
வயதான காலத்தில் வேறு பணிகளுக்கு செல்ல முடியாத நிலையில் பெரும்பாலானோர் இருப்பதாகவும், பணியில் இருப்போருக்கு வழங்கப்படும் போது, குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்களுக்கும் 14% அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
14% அகவிலைப்படி:
தமிழகத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான அகவிலைப்படி குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் தமிழகத்தில் உள்ள அனைத்து வாரியங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு ஒரே நேரத்தில் வழங்கப்படுவது இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை ஆகும்.
10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஜூன் 1 முதல் 30 வரை ஆன்லைன் வகுப்புகள்!
அதன்படி, அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த முறை தவறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் இந்நிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் துவக்கப்பட்டு 51 ஆண்டுகள் கடந்த நிலையில், முதன்முறையாக பணியில் இருப்பவர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வை வழங்கிவிட்டு, அதன் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை நிறுத்தி வைத்த அரசு தி.மு.க. அரசுதான். மாநிலம் முழுவதும் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கின்ற இந்தத் தருணத்தில் குடிநீர் வடிகால் வாரியம் ஓய்வூதியதாரர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயர்வை இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரொக்கமாக அளித்தால் பேருதவியாக இருக்கும்.
Exams Daily Mobile App Download
மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான 14 சதவீத அகவிலைப்படி உயர்வை பணியில் இருப்போருக்கு வழங்கப்பட்டது போல 1-1-2022 முதல் உயர்த்தி வழங்கவும், பிற வாரியங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் இதுபோன்று வழங்கபடாமல் இருந்தால், அவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.