10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஜூன் 1 முதல் 30 வரை ஆன்லைன் வகுப்புகள்!

0
10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - ஜூன் 1 முதல் 30 வரை ஆன்லைன் வகுப்புகள்!
10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - ஜூன் 1 முதல் 30 வரை ஆன்லைன் வகுப்புகள்!
10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஜூன் 1 முதல் 30 வரை ஆன்லைன் வகுப்புகள்!

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஹரியானா மாநிலத்தில் உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் வகுப்பிற்காக மாணவர்களுக்கு டேப்லெட்களும் கொடுக்கப்படவுள்ளன.

ஆன்லைன் வகுப்புகள்:

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்ததும் பழையபடி நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகளும், பொதுத்தேர்வுகளும் நடத்தப்பட்டது. கொரோனா கால கட்டத்தில் இழந்த கல்வியை மீட்டெடுப்பதற்காக பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையும் குறைக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

ஹரியானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு மே 23 முதல் ஜூன் 30 வரை கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜூன் 1 முதல் 30 ஆம் தேதி வரை தான் கோடை விடுமுறை என முன்னர் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுமட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் மாணவர்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். எப்போதும் கோடை விடுமுறை நாட்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறும். ஆனால், இந்தாண்டு வெப்பம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் விடுமுறை அளிக்க கோரி பெற்றோர்கள் கேட்டுக்கொண்டனர்.

TET தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? – உங்களுக்கான அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

இந்நிலையில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளையும் ஏற்று ஹரியானா அரசு ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை உள்ள 30 நாட்களுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் வசதிக்காக ஆன்லைன் வகுப்பிற்கு டேப்லெட் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கல்வி கற்பதை ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும், சந்தேகத்தை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!