மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – விரைவில் முக்கிய முடிவு?

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - விரைவில் முக்கிய முடிவு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - விரைவில் முக்கிய முடிவு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – விரைவில் முக்கிய முடிவு?

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில், மத்திய மோடி அரசு அதி விரைவில் தனது ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் இந்த முடிவை மேற்கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி மத்திய அரசு ஊழியர்களின் சம்பள கணக்கீட்டுக்கான பிட்மெண்ட் காரணி விரைவில் உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஜாக்பாட் அறிவிப்பு :

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியானது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதம் அகவிலைப்படி கிடைக்கிறது. இந்த அகவிலைப்படி உயர்வால் இனி 34 சதவீத அளவுக்கு அகவிலைப்படி கிடைக்கும். அகவிலைப்படி உயர்வால் வருகிற ஏப்ரல் மாதம் முதல் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கூடுதல் சம்பளம் கிடைக்கும். கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை ஒரே அளவிலான அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வருகிறது. இதை தொடர்ந்து மத்திய அரசு ஃபிட்மெண்ட் காரணி குறித்து முடிவெடுக்க உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – RCB உடன் வெற்றிக்கு பிறகு புள்ளி அட்டவணை!

அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் ஃபிட்மெண்ட் காரணி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசுக்கு, ஊழியர்களின் சம்பளத்துக்கான பொருத்துதல் காரணியை அதிகரிக்கும் அழுத்தம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு அதன் மூலம் 34 சதவீதமாக DA உயர்ந்துள்ளது. மேலும் ஃபிட்மெண்ட் காரணியும் உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிக பலன் கிடைக்கும். மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் காரணியை உயர்த்தி அறிவித்தால், அவர்களின் சம்பளமும் உயரும். தற்போது 2.57 சதவீதம் என்ற அடிப்படையில் ஃபிட்மெண்ட் காரணியின் கீழ் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இது 3.68 சதவீதமாக உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.8,000 வரை உயரும்.

அதாவது குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயிலிருந்து 26,000 ரூபாயாக உயரும். ஃபிட்மெண்ட் காரணியை 3.68 ஆக உயர்த்தினால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.26,000 ஆக இருக்கும். அப்போது, ஒருவரின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 என்றால், அலோவன்ஸ் தவிர்த்து, 2.57 ஃபிட்மெண்ட் காரணியின்படி ரூ.46,260 கிடைக்கும். அதாவது 18,000 X 2.57 = 46,260 ஃபிட்மெண்ட் காரணி 3.68 ஆக இருந்தால், சம்பளம் ரூ. 95,680 ஆக உயரும். (26000X3.68 = 95,680) என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000லிஇருந்து ரூ.26,000 ஆக உயரும். ஃபிட்மெண்ட் காரணியை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!