தமிழக அரசு ஊழியர்கள் முதல்வருக்கு கடிதம் – அகவிலைப்படி உயர்வு வேண்டி கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை உயர்த்த கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். தற்போது அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்து வருவதால் அகவிலைப்படி உயர்வு தேவை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் தனது ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை அளித்தது. இதன் மூலம் தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 38 சதவீதத்தை அகவிலைபடியாக பெற்று வருகின்றனர். மத்திய அரசை தொடர்ந்து பல மாநில அரசுகளும் அகவிலை படியை வெகுவாக உயர்த்தியது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஜூலை 1ஆம் தேதி கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. அதன் பிறகு மேலும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளித்து 34% ஆக அதிகரிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 38% அகவிலைப்படி பெற்று வருகின்றனர். அதனால் அவர்களை போல தமிழக அரசு ஊழியர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
SSC GD Constable 2022 தேர்வில் வெற்றி பெற – Best Online course!! 60 நாட்கள் மட்டும் போதும்!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதனை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வரும் என்று எண்ணி ஏமாற்றம் அடைந்தோம். உரிய கால இடைவெளிகளில் வழங்கிட வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேற்றபடாவிட்டால் வரவிற்கும் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை கருப்பு பண்டிகையாக அனுசரிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என்று கூறியுள்ளனர்.