தமிழகத்தில் அகவிலைப்படி 4% உயர்வு – அரசு ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
தமிழகத்தில் அகவிலைப்படி 4% உயர்வு - அரசு ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் அகவிலைப்படி 4% உயர்வு - அரசு ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் அகவிலைப்படி 4% உயர்வு – அரசு ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 4% சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியான இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அகவிலைப்படி:

இந்தியாவில் நடப்பு ஆண்டில் முதல் கட்டமாக மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதமாக உயர்த்தியது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 42 சதவீதம் அகவிலைப்படியாக பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் தங்களுக்கும் அகவிலைப்படி உயர்த்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

தமிழகத்தில் நாளை (மார்ச் 18) Power Cut – உங்க ஏரியாவும் இருக்கானு செக் பண்ணுங்க.. முழு விவரம் உள்ளே!

இது குறித்து ஆலோசிக்கப்பட்டு தற்போது தமிழக அரசு, ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 4 % உயர்த்தி அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38% ல் இருந்து 42% ஆக உயர்த்தி வழங்கப்படும்.

தற்போது உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படி 4% 2023 ஏப்ரல் 1ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வால் தமிழகத்தில் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!