மாநில அரசு ஊழியர்களுக்கு 10.01% அகவிலைப்படி ( DA) உயர்வு – முதல்வர் ஒப்புதல்!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு 10.01% அகவிலைப்படி ( DA) உயர்வு - முதல்வர் ஒப்புதல்!
மாநில அரசு ஊழியர்களுக்கு 10.01% அகவிலைப்படி ( DA) உயர்வு - முதல்வர் ஒப்புதல்!
மாநில அரசு ஊழியர்களுக்கு 10.01% அகவிலைப்படி ( DA) உயர்வு – முதல்வர் ஒப்புதல்!

தெலுங்கானா மாநில அரசு ஊழியர்களுக்கு ஜனவரி, 2020 முதல் ஜூன், 2021 வரை DA 7.28 சதவீதமாக மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், தற்போது 17.29 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி மற்றும் ஓய்வூதிய நிவாரணம் நிர்ணயிக்கப்பட்டு அதன்படி வழங்கப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய மற்ற படிகளும் அந்த சமயத்தில் உயர்த்தப்படுகிறது. கொரோனா கால பொருளாதார சிக்கலை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கு அளிக்க வேண்டிய படிகளை நிலுவையில் வைத்திருந்தது. மாநில அரசுகளும் கொரோனா நோய் கட்டுப்பாடுகளை சமாளிக்கும் தீவிர பணியில் ஈடுபட்டு இருப்பதால், மத்திய அரசை பின்பற்றி மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வை நிலுவையில் வைத்தது.

தமிழகத்தில் ஜன.24ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை அறிவித்து வருகிறது, அந்த வகையில் தற்போது தெலுங்கானா மாநில அரசு தனது ஊழியர்களுக்கான DA தொகையை அதிகரித்துள்ளது. ஜனவரி, 2020 முதல் ஜூன், 2021 வரை DA 7.28 சதவீதமாக இருந்தது. தற்போது அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 10.01 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் DA 28 சதவீதத்தில் இருந்து 17.29 சதவீதமாக ஜூலை 2021 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஜனவரி, 2020, ஜூலை, 2020 மற்றும் ஜனவரி, 2021 முதல் நிலுவையில் உள்ள டிஏவின் மூன்று தவணைகள் தற்போது வழங்கப்படுவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

IPL ஏலத்தில் இருந்து விலகும் வெளிநாட்டு வீரர்கள் – BCCI அறிவிப்பு! ரசிகர்கள் ஷாக்!

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாத சம்பளத்துடன், அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது. 2020 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தில் வழக்கமான ஊதியத்தில் ஊதியம் பெறும் உதவி பெறும் பாலிடெக்னிக் உள்ளிட்ட உதவி பெறும் நிறுவனங்களின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் ஜூலை, 2021 முதல் பகுதி நேர உதவியாளர்கள் மாதத்திற்கு 100 ரூபாய் தற்காலிகமாக அதிகரிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த DA உயர்வானது ஜில்லா பரிஷத், மண்டல் பாரிஸ்-ஹாட்கள், கிராம பஞ்சாயத்துகள், நகராட்சிகள், முனிசிபல் கார்ப்பரேஷன்கள், வேளாண் சந்தைக் குழுக்கள் மற்றும் ஜில்லா கிராண்ட்ஹாலயா சமஸ்தாக்கள், வேலைக் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!