IPL ஏலத்தில் இருந்து விலகும் வெளிநாட்டு வீரர்கள் – BCCI அறிவிப்பு! ரசிகர்கள் ஷாக்!
2022 ஆம் ஆண்டுக்கான IPL போட்டிகளுக்கான ஏலம் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக சமீபத்தில் BCCI அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து தற்போது வெளிநாட்டு வீரர்கள் சிலர் IPL தொடரில் விளையாட விருப்பம் இல்லை என்று தவிர்த்துள்ளனர்.
BCCI அறிவிப்பு:
இந்த ஆண்டு முதல் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் வரை ஐபிஎலில் பங்கேற்கவுள்ளன. புதிய இரண்டு அணிகள் சேர்க்கப்படுவதால், அந்த அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும் விதமாக 15 வது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெற்று முடிவடைந்துள்ளது. ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் + ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்,வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் தற்போது வெளிநாட்டு வீரர்கள் சிலர் IPL ஏலத்தில் இருந்து தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
TNPSC தேர்வுகளுக்கான முக்கிய பதிவுகள் – விண்ணப்பத்தாரர்கள் கவனத்திற்கு..!
இந்நிலையில் எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் (14 கோடி), ஜாஸ் பட்லர் (10 கோடி), யாஷஸ்வி ஜெய்ஷ்வால் (4 கோடி) ஆகியோரை மட்டுமே தக்கவைத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரில் ஒருவரை தக்க வைக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் கேள்வியாக எழுந்த நிலையில் தற்போது அதற்கு பதில் கிடைக்கும் விதமாக BCCI முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்..!
ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், ரூட், ஸ்டார்க் ஆகியோர் இந்த ஆண்டுக்கான IPL மெகா ஏலத்தில் விருப்பம் தெரிவிக்காததால் அவர்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக BCCI தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முக்கிய வீரர்களாக திகழ்ந்து வைத்த ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் அணியில் இடம் பெறாமல் உள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இம்முறை காலிறுதி போட்டிக்கு முன்னேறுமா என்று அனைத்து தரப்பிலும் கேள்வி எழுந்துள்ளது.