ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – இனி சிலிண்டரும் வாங்கலாம்!
இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலம் சிலிண்டர் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 5 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர்கள் ரேஷன் கடைகள் மூலமாகப் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர்:
இந்தியாவில் ஏராளமான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர். சிலிண்டர் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. மத்திய அரசு சார்பாக பிரதமரின் திட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ஒரு வருடமாக சிலிண்டர் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து தொடர்ந்து அதிகரிக்கும் சிலிண்டர் விலை உயர்வு பொது மக்களும் அரசியல் கட்சியினரும் கண்டித்து வருகின்றனர்.
மாநில அரசு ஊழியர்களுக்கு 10.01% அகவிலைப்படி ( DA) உயர்வு – முதல்வர் ஒப்புதல்!
இந்த நிலையில் ரேஷன் கடைகள் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு தேவையான அரிசிம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வழங்கி வருகிறது. அதனை தொடர்ந்து பரவி கொரோனா இரண்டாம் அலையில் போது மக்களின் நலன் கருதி இலவசமாக உணவு தானியங்கள், மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டமும் நடைமுறையில் இருந்து வருகிறது.
தமிழகத்தில் ஜன.24ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து தற்போது சமையல் சிலிண்டர்களும் இனி ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரேஷன் டீலர்கள் மத்திய அரசிடம் ரேஷன் கடைகளில் சிலிண்டர் விநியோகம் செய்ய கோரிக்கை விடுத்தனர். தற்போது தான் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் விரைவில் 5 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர்கள் ரேஷன் கடைகள் மூலமாகப் பொதுமக்களுக்கு வழங்கப்படும். சிலிண்டர் விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.