தமிழகத்தில் ஜன.24ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டம் பூமலூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் 24.01.2022 அன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் ஊழியர்கள் மூலம் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மூலம் மின் இணைப்புகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மின் கம்பிகள் மாற்றுதல் வீதிகளில் செல்லும் மின் வயர்களை சரி செய்தல் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ளவைகளை கண்டறிந்து அகற்றுதல், மின் வயர்களின் குறுக்கே செல்லும் மரக்கிளைகளை வெட்டுதல் போன்ற பணிகள் பராமரிப்பின் போது நடைபெற்று வருகிறது.
ரிஷப் பண்டின் பேட்டிங்கை பார்த்து நடனமாடிய விராட் கோஹ்லி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இது குறித்து அந்தந்த பகுதி மின் வாரிய செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன் அறிவிப்பு செய்கின்றனர். இதனை அறிந்து மின் பயனர்கள் மின் சார்ந்த பணிகளை முன்கூட்டியே முடிக்க திட்டமிட்டு வருகின்றனர். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பூமலூர் துணை மின் நிலையத்தில் ஜன.24 அன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் புதிய செயலி அறிமுகம்!
அதனால் மங்கலம், பூமலூர், மலைக்கோவில், அக்ரஹாரம் புதூா், பள்ளிப்பாளையம், இடுவாய், பாரதிபுரம், சீராணம்பாளையம், கிடாத்துறை புதூா், வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் ஜன.24 அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.