தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – முதல்வருக்கு நன்றி!
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றியை திமுக கட்சி பெற்றது. இந்த மகத்தான வெற்றியை, தமிழக மக்கள் பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளனர் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவன தலைவர் சா.அருணன் கூறியுள்ளார்
நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு உள்ளாட்சி தேர்தல் வெற்றி:
தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற்று, இந்த தேர்தலில் திமுக, ஆட்சிக்கு வந்தது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் மே மாதத்தில் பதவி ஏற்றார். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் நலத்திட்டங்கள் அமலாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 18ம் தேதி நகர்ப்புற உள்ளட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்றது, இதன் வாக்கு எண்ணிக்கை 22ம் தேதி நடைபெற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின. இந்த முடிவுகள் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவன தலைவர் சா.அருணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வரலாறு காணாத வெற்றி பெற்றது. தமிழ்நாடு முதலமைச்சரின் 9 மாத கால நல்லாட்சிக்கு, மக்கள் தந்த பிறந்தநாள் பரிசு. அந்த அறிக்கையில் தமிழக முதல்வர் செயல்படுத்திய நலத்திட்டங்கள் அனைத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
- அரசு ஊழியர்களின் போராட்ட காலத்தை பணி காலமாக அறிவித்து, துறை ரீதியான நடவடிக்கை ரத்து, வழக்குகள் ரத்து, பதவி உயர்வில் இருந்த தடை நீக்கம்.
2. அரசு பணியில் இருக்கும் மகப்பேறு பெண்களுக்கு 12 மாத கால விடுப்பு, 14 சதவீதம்% அகவிலைப்படி உயர்வு, அரசு பணியாளர்கள் பயிற்சி மையம் அந்தந்த மாவட்டத்தில் தொடங்க உத்தரவு.
3. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பில் தமிழ்மொழி கட்டாயம், அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், கொரோனா நிவாரணம் ரூ.4000, ஆவின் பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு
தமிழகத்தில் LKG, UKG வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? கல்வித்துறை திட்டம்!
4. இதன் தொடர்ந்து நம்ம தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் 75% விழுக்காடு தீர்வு, விபத்து ஏற்பட்டு 48 மணிநேரத்திற்குள் தனியார் மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை பெறுபவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
5. மேலும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு .