குஜராத்தில் ஒன்பது நாள் சர்வதேச காத்தாடி திருவிழா அஹமதாபாத்தின் சபர்மதி நதிக்கரையில் தொடங்கியது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு நன்மைகளைப் பெற வருமான வரம்பு 8 லட்சத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
ஜோத்பூர் எல்லையில் 6,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 6 சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி.
மேற்கு ஆசியாவின்மிகப்பெரிய கதீட்ரல் எகிப்தில் திறக்கப்பட்டது.
பெண்கள் விவாகரத்து தொடர்பான செய்திகளை குறுந்தகவல் மூலம் அறிய சவுதி அரேபியா திட்டம்
ஷேக் ஹசினா தொடர்ந்து மூன்றாவது முறையாக வங்கதேசத்தின் பிரதமராக பதவியேற்றார்.
BHIM-UPI பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு டிசம்பர் 2018ல் 1 லட்சம் கோடி ரூபாய் அளவைக் கடந்தது.
ஜலந்தரில் உள்ள லவ்லி தொழில்முறை பல்கலைக்கழகத்தில் பெண்கள் அறிவியல் காங்கிரஸை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி திறந்து வைத்தார்.
அடுத்த நான்கு ஆண்டுகளில் 40 செயற்கைக் கோள்களை உருவாக்குவதற்கு 10,900 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு.
இந்திய துணைக் குடியரசுத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, புது டெல்லியில் ஜவுளித் துறையின் பல்வேறு பிரிவுகளில் தங்கள் பங்களிப்புக்காக விருது வழங்கினார்.
வட மத்திய ரயில்வே, [NCR] பிரயாக்ராஜ் நகரத்தில் துவங்கும் கும்ப மேளாவில் மக்களுக்கு உதவுவதற்காக ‘ரயில் கும்ப் சேவா மொபைல் செயலி’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அபுதாபியில் நடைபெறும் AFC ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா தாய்லாந்தை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.
இந்தியா ஆஸ்திரேலியாவை முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் வீழ்த்தி தொடரை வென்றது.
ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரை வென்றமுதல் இந்தியா மட்டும் ஆசியக் கேப்டன் எனும் சாதனை படைத்தார் விராட் கோஹ்லி.
இமாச்சலப் பிரதேச மகளிர் தலைமைக்காவலர் ராணி விசாகாப்பட்டினத்தில் நடைபெற்ற சீனியர் தேசிய மகளிர் ஜூடோ சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார்.
தமிழ்நாட்டின் எஸ். கலைவணி மற்றும் தெலுங்கானாவின் நிக்கத் சரீன் ஆகியோர் பெண்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.
புனேயில் நடைபெற்ற டாடா ஓபன் மகாராஷ்டிராவில் இந்திய ஜோடி ரோஹன் போபண்ணா மற்றும் டிவிஜ் ஷரன் ஆகியோர் தமது முதல் ஏடிபி டூர் டென்னிஸ் பட்டத்தை வென்றனர்.